#

#

#

#

#

#

#

#

#

#

Wednesday, March 21, 2018

காண்டாமிருகத்தின் அழிவும், மனிதகுலத்தின் எதிர்காலமும்': எச்சரிக்கும் ஆய்வாளர்கள் #InternationalDayofForests

உலகின் கடைசி வெள்ளை ஆண் காண்டாமிருகம் நேற்று (செவ்வாய்க்கிழமை) இறந்துள்ளது. ஒரு மாதகாலமாக உடல் உபாதையை அனுபவித்த இந்த காண்டாமிருகத்திற்கு மருத்துவர்கள் மருந்தளித்து மரணிக்க வைத்தனர். அதன் மறைவு குறித்து பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், இனி மீண்டும் இத்தகைய காண்டாமிருகம் பிறக்க, செயற்கை கருதரிப்பு வாய்ப்பே உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் மார்ச் 21ஆம் தேதி உலக காடுகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இந்த காண்டா மிருகத்தின் மரணம் என்பது, காடு மற்றும் சூழல் குறித்து மனிதர்கள் எந்த அளவிற்கு கவனம் செலுத்த வேண்டும் என்பதை நினைவூட்டும் விஷயமாக உள்ளது. உலகில் உள்ள உயிரினங்களுள், 30 முதல் 50 சதவீதம் வரை, 2050 ஆம் ஆண்டுக்குள் அழியலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.



இது இயல்பான ஒன்றல்ல. மனிதனின் செயல்பாடுகள்தான் இந்த அழிவுக்கு காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
அழியும் நிலையில் விலங்குகள்
இப்போது இந்த பூவுலகில் 5,000 கிழக்கத்திய கொரிலாக்கள்தான் உள்ளன. போரினாலும், வேட்டையினாலும் இந்த எண்ணிக்கை 2050 ஆம் ஆண்டுக்குள் 350 ஆக குறையலாம்.
  • போர்னியோ தீவில் கொல்லப்பட்ட ஒரு லட்சம் ஒராங்குட்டான் குரங்குகள்
  • விந்தணுக்கள் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?
ஆனால், அதே நேரம் விலங்குகளை பாதுகாக்கும் நடவடிக்கையும் அதிகரித்துள்ளது. அழிந்து வரும் வனவிலங்கு என்று பட்டியலிடப்பட்டு இருந்த கருப்பு காண்டாமிருகத்தின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.



அமுர் சிறுத்தையின் எண்ணிக்கை 2007 ஆம் ஆண்டு 30 என்ற எண்ணிக்கையில் இருந்தது. ஆனால், இன்று அதன் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது.
இண்ட்ரி லெமூர் (Indri Lemur) என்ற விலங்கின் எண்ணிக்கை இப்போது பத்தாயிரத்திற்கும் குறைவுதான். ஆனால், இது 2050 ஆம் ஆண்டுக்குள் இரண்டாயிரமாக குறையலாம்.
இதற்கு காரணம் அதன் வாழ்விட அழிப்பும், வேட்டையும்தான்.
இவை மட்டும் அல்ல 30 - 50 சதவீத உயிரினங்கள் இப்புவியில் அழியும் நிலையில் உள்ளன.
அருகிவரும் 5000 விலங்குகள்
சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கம், அருகிவரும் நிலையில் இருக்கும் உயிரினங்கள் என 5000 உயிரினங்களை பட்டியலிட்டுள்ளன. அவற்றில் சீனாவில் உள்ள யுனான பாக்ஸ் ஆமை, சுமத்திரா காண்டாமிருகம், ஆரஞ்சு நிறத்தில் வயிற்றுப் பகுதி கொண்ட கிளி ஆகியவையும் அடங்கும்.
குறிப்பாக சுமத்திரா காண்டமிருகம் நூற்றுக்கும் குறைவாகதான் உள்ளதாக கூறுகிறது சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கம். வேட்டை ஆடப்படுவதுதான் இந்த எண்ணிக்கை குறைவதற்கு முக்கியமான காரணம் என்று கூறுகிறது இந்த சங்கம்.
ஏன் நாம் கவலை கொள்ள வேண்டும்?
ஏதோ ஒரு விலங்கு அழிந்தால் நாம் ஏன் கவலைக் கொள்ள வேண்டும்? - என்பது நம் கேள்வியாக இருந்தால், ஏதோ ஒரு விலங்கின் அழிவு மனித அழிவுக்கு வழிவகுக்கலாம் என்கிறார்கள் சூழலியலாளர்கள்.
சூழலியல் ஆய்வாளர் சு. நாராயணி, " இது ஓர் உயிர்வலைபின்னல், இந்த பின்னலில் ஒரு கண்ணி அறுப்பட்டால், இன்னொன்றுக்கு நிச்சயம் ஆபத்தும் வரும், அழிவும் வரும். உணவு சங்கிலியில் மனிதன் மேலே இருக்கிறான். மேலே இருப்பதால், அதிக ஆபத்தும் பொறுப்பும் ஒருங்கே மனிதனுக்குதான் இருக்கிறது." என்கிறார்.
அவர், "இதை எளிமையாக புரிந்து கொள்ள வேண்டுமானால், பாசியை சொல்லலாம். மனிதன் பாசியை நேரடியாக உண்பதில்லை. ஆனால் பாசியை உண்ணும் மீனை மனிதன் உண்கிறான். பாசியில் விஷம் ஏறியது என்றால், அது உண்ணும் மீனை முதலில் பாதிக்கும். பின், மீனை உண்ணும் மனிதனை பாதிக்கும். அது போலதான் ஓர் உயிரினத்தின் அழிவும்." என்கிறார்.
ஓர் உயிரினத்தின் அழிவு, வாழ்விட அழிவிற்கும் வழிவகுக்கும் என்கிறார் நாராயணி.
குறிப்பாக புலி, காண்டாமிருகம் போன்ற குடை இனம் (Umbrella Species) அழிந்தால், அவை ஆளுகை செலுத்தும், அதன் வாழ்விடமும் நாசமாகும் என்கிறார் நாராயணி.
டூடூ பறவையின் அழிவு
இதை வழிமொழியும் சூழலியல் எழுத்தாளர் நக்கீரன், டூடூ பறவையையும், கல்வாரியா மரத்தையும் உதாரணமாக சொல்கிறார்.
நக்கீரன், "மொரீஷியஸில் இருந்த கல்வாரியா எனும் மரத்தின் பழங்கள்தான் டூடூவின் விருப்ப உணவாக இருந்தது. டூடூவின் கழிவிலிருந்து வெளியேறும் விதைதான் முளைக்கும் ஆற்றல் மிக்கதாக இருக்கும். அங்கு டூடூ பறவை அழிந்ததால், கல்வாரியா மரமும் அழிந்து போய்விட்டது. இப்படி எந்த கண்ணி எதனுடன் தொடர்புடையது என்று தெரியாது. எதன் அழிவும் மனிதனின் அழிவுக்கு வழிவகுக்கலாம்." என்கிறார்.



ஏதோ ஒரு விலங்கு அழிகிறது என்று மெளனியாக இருந்துவிடக்கூடாது. அழிந்து வரும் உயிரினத்தை காப்பதில் அதிக அக்கறை செலுத்த வேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

Saturday, March 03, 2018

Friday, March 02, 2018

Exam Sothanaigal - Short Film

https://youtu.be/cLd9hGZ8PbY

AIRCEL PORTஎளிமையான வழிகள் மற்ற நிறுவன எண்ணிலிருந்தும் பெறலாம்!

ஏர்செல் நிறுவன பயனாளராக உள்ளோர் தங்களின் நடப்பு ஏர்செல் எண்ணை வேறொரு நிறுவனத்திற்கு மாற்றிக் கொள்வதற்கான இரு வழிகள் இங்கே தரப்பட்டுள்ளன.

☀இவ்விரு வழிகளில் ஏதேனுமொரு வழியில் தங்களின் ஏர்செல் எண்ணிற்கான தனிப்பட்ட முனையக் குறியீட்டு எண்ணைப் (UPC : Unique Port Code) பெறலாம்.


☀இப்படிப் பெறப்படும் முனையக் குறியீட்டு எண் 10 நாள்களுக்குள் காலவதியாகிவிடும்.

☀எனவே, முனையக் குறியீட்டு எண்ணைப் பெற்றவுடன் நீங்கள் மாறவிரும்பும் புதிய அலைபேசி நிறுவன விற்பனை முகவரிடம் உடன் விண்ணப்பித்து விடவும்.

☀அவ்வாறு விண்ணப்பிக்கையில் நடப்பு ஏர்செல் எண்ணிற்கு அளித்திருந்த நபரின் பெயரிலான அடையாளச் சான்றினையே புதிய நிறுவனத்திடமும் அளிக்க வேண்டும்.

☀முனையக் குறியீடு தங்களின் நடப்பு Aircel எண்ணிற்குத் தான் கிடைக்கப்பெறும் என்பதால், முதலில் தங்களின் ஏர்செல் எண்ணிற்குச் சமிக்ஞை (Signal) கிடைக்கின்றதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

☀இல்லை எனில், தங்களில் செல்லிட பேசியில் Network Operator பகுதிக்குச் சென்று Select Manually-யைத் தெரிவு செய்து, தேடிவரும் பட்டியலில் AIRTEL நிறுவனத்தைத் தெரிவு செய்து கொள்ளவும்.

☀AIRCEL சமிக்ஞை கிடைக்காத இடங்களில் வாடிக்கையாளர்களுக்கானத் தற்காலிகச் சேவையை ( குறுஞ்செய்தி அனுப்ப / பெற) Airtel வழங்கி வருகிறது.

☝வழிமுறை : 1

⚡தங்களின் ஏர்செல் எண்ணிலிருந்து PORT மற்றும் இடைவெளிவிட்டு தங்களின் எண்ணை தட்டச்சுசெய்து 1900 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.

(உ-ம்) PORT 9XXXXXXXXX

⚡இம்முறையில் விண்ணப்பிக்க 50 பைசா பிடித்தம் செய்யப்படும்.

✌வழிமுறை : 2

⚡பின்வரும் எண்ணிற்கு எந்தவொரு அலைபேசி நிறுவன எண்ணில் இருந்தும் அழைத்து முனையக் குறியீட்டைப் பெறலாம். முற்பகல் 10 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இச்சேவை வழங்கப்படுகிறது.

👉சென்னை மண்டலம் : 9551299210

👉தமிழ்நாட்டின் பிற பகுதிகள் : 9750999209

⚡நீங்கள் ஏர்செல் எண் வாங்கிய பகுதியைப் பொறுத்து மேற்கண்ட பகுதிக்கான எண்ணை, எந்தவொரு நிறுவன அலைபேசி எண்ணிலிருந்தும் அழைக்கலாம்.

⚡மாநிலம் முழுவதும் பலர் தொடர்பு கொள்வதால் அழைப்பு கிடைப்பது சற்று கடினம். Number Busy / Please Check the Number என்றும் வரும். எனினும் தொடர்ந்து முயற்சிக்கவும்.

⚡அழைப்பு ஏற்கப்படுகையில் தங்களின் நடப்பு ஏர்செல் எண்ணை அவர்களிடம் தெரிவிக்கவும்.

⚡அடுத்த 24 மணி நேரத்திற்குள் தங்களுக்கான முனையக் குறியீட்டெண் (UPC) தங்களின் நடப்பு ஏர்செல் எண்ணிற்கே அனுப்பி வைக்கப்படும்.

⚡நினைவிருக்கட்டும், இவ்வாறு பெறப்படும் முனையக் குறியீட்டெண்ணிற்கான காலக்கெடு 10 நாட்கள் மட்டுமே.

⚡இதேபோன்று 9842012345 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும் பெறலாம்