#

#

#

#

#

#

#

#

#

#

Sunday, February 25, 2018

*அற்புத வாழ்க்கை*- என்னைக் கவர்ந்த பதிவு

என்னைக் கவர்ந்த பதிவு.
எழுதியவருக்கு நன்றி.

 *அற்புத வாழ்க்கை*

 *அப்பன்*
 *உயிர்துளி*
 *கொடுத்து..*

 *அம்மை*
 *உயிரை*
 *சுமந்து..*

 *தொப்புள்*
 *கொடி*
 *உயிர் வளர்ந்து..*
 *பத்து மாதம்*
 *கருவறை*
*இருட்டில்*
*மூச்சுபயிற்சி*
*கண்டு*
*பூமியின்*
*வெளிச்சத்தில்*
*வந்து விழும்*
*குழந்தை*

*வித்தியாசமான*
*உருவம்*
*கொண்டு*
*வேற்றுமையான*
*எண்ணம்*
*கொண்டு*
*மனிதாபிமான*
*குணம்*
*கொண்டு*
*ஆண்டவன்*
*விருப்பபடி*
*நிறம்*
*கொண்டு*

*வளர்ந்து*
*வாழ்ந்து*

*நல்லதும் கண்டு*
*கெட்டதும் கண்டு*

*சுகமும் கண்டு*
*அவமானமும் கண்டு*

*ஒவ்வொருவரும்*
*ஒவ்வொரு*
*வித்தியாசமான*
*அனுபவம்*
*கண்டு*

*இது தான் உலகம்*
*இது தான் வாழ்க்கை*

*இது தான் பாதை*
*இது தான் பயணம்*
*என்று*

*தெளிவதற்குள்ளே*
*விதி சதி செய்து*
*இயற்கை*
*மாற்றம்*
*கொண்டு*

*உடலை வளர்த்து*
*அறிவை வளர்த்து*

*நட்பை வளர்த்து*
*எதிர்ப்பை வளர்த்து*

*கோழையை எதிர்த்து*
*வீரத்தை வளர்த்து*

*படிப்பு கண்டோம்*
*தினமும்*
*பிடித்த உணவு* *உண்டோம்*

*வேலை கொண்டோம்*
*உழைப்பு கொண்டோம்*

*பணம் கண்டோம்*
*திமிர் கொண்டோம்*

*ஆணவம் கொண்டோம்*
*அறியாமை கொண்டோம்*

*ஏளனம் கொண்டோம்..*
*எளிமை துறந்தோம்*

*பழைய நிலை மறந்து*
*பணம் கண்டு புது*
*வாழ்க்கை*
*வாழ்ந்தோம்*

*பணம் கண்டு பாசம்*
*என்ற வேசம்* *கொண்டோம்..*

*மனைவி மக்கள்* *கண்டோம்..*
*பேரப்பிள்ளை*
*கண்டு*
*பேரின்பம் கண்டோம்..*

*ஒருநாள்*
*அப்பன் உயிர்துளி*
*வெளுத்து சாயம் போக*

*அம்மை கொடுத்த*
*உயிர் போக*

*உணவு உண்டு*
*வளர்ந்த உடல்*
*மட்டும்*

*அனாதையாய்*
*இடுகாட்டில்*
*நெருப்பின்*
*வாயில்போக*

*பெத்தவளும் வர* *தயாராக இல்லை..*

*பெத்தவனும் வர*
*தயாராக இல்லை ..*

*உள்ளத்தாலும்* *உடலாலும் இணைந்து*
*வாழ்ந்த கட்டிய* *மனைவியும்*
*வர தயாராக*
*இல்லை..*

*பெத்த சீர்மிகு* *பிள்ளையும்*
*வர தயாராக இல்லை..*

*பேரின்பம் அடைந்த*
*ஆயிரம் முத்தம் நீ*
*கொடுத்த* *பேரப்பிள்ளையும்*
*உடன் வர*
*தயாராக இல்லை..*

*உன்னுடைய*
*உயிர் போனால்*
*சகலமும் போனது..*

*உடல் நெருப்போடு* *போனது..*

*பணம் வீட்டோடு*
*நின்றது ..*

*பாசம்*
*சுடுகாட்டோடு*
*போனது..*

*கடைசி வரை*
*யார் வருவார்*

*என்று*
*அறியும் ஆற்றல்*
*எவன் அறிவான்*
*அகிலத்தில்..*

*அனுபவத்தோடு*
*சேர்ந்த*
*கர்மவினையும்..*

*பாவமும்*
*புண்ணியமும்*
*கடைசி வரை வந்து*
*சேர்ந்தது..*

*ஆத்மா மட்டுமே*
*ஆண்டவனை*
*அடைந்தது..*

*சுடுகாட்டு*
*வெந்தணலில்*
*ஒரு கை பிடி*
*சாம்பல் மட்டுமே*
*மிஞ்சியது..*

*அறுபது வருடம்*
*இல்லை*
*நூறு வருட*
*வாழ்விற்கு*
*மிச்சம்..*

*இவ்வுளவுதான்..*
*வாழ்க்கையில்..*
*இப்பூவுலகில்*

*எதுவும் உடன் வர* *முடியாது*
*என்று*
*தெளிந்த*
*நமக்குள்*
*எதற்கு இந்த*
*கேவலமான*
*வஞ்சம்*
*வக்கிரம்*
*பொறாமை*
*ஏளனம்*
*வரம்பு மிறி பேச்சு*
*தகுதி மிறி ஆசை..*
*பொறுமையோடும்*
*எளிமையோடும்*
*நல்ல எண்ணத்தோடும்*
*வாழ்ந்தால்*
*போகும் பாதை*
*கடைசியில்*
*மோச்சத்திற்கு*
*வழி வகுக்கும்..*

*நாம் வாழும் காலத்தில்*

*போட்டி             இன்றி*
*பொறாமை     இன்றி*
*காமம்                இன்றி*
*குரோதம்       காட்டாமல்*
*களவு           செய்யாமல்*
*பேராசை   கொள்ளாமல்*

*அடுத்தவரின் குடியை* *கெடுக்காமல்*

*வாழ கற்றுக்*
*கொள்ளுங்கள்*

*பிறரின் தவறை* *மன்னித்து பழகுங்கள்* 

*தன்னிடம் ஆயிரம்* *கறைகள்* 
*ஆயிரம் குறைகள்*
*அவற்றை நீக்க*
*முயற்சியுங்கள்*

*பிறரை பழிக்காதீர்கள்*

*நல்ல வண்ணம்*
*வாழலாம்*

*வாழ்வில் வளம்*
*பெறலாம்*

*வாழ்க வளமுடன்* *வளர்க நலமுடன்...*

🌹🌹🌹

Thursday, February 22, 2018

B.Ed., Practical Examinations Wishes!!!

B.Ed.,  செய்முறை தேர்வை சிறப்பாக செய்வதற்கு அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!


இரண்டு நிமிடத்தில் வரைந்த ஓவியம்...!!!- சஞ்சய் காந்தி, B.Ed., மாணவர்....

இரண்டு நிமிடத்தில் வரைந்த ஓவியம்....... வரைந்தவர் பெயர்: சஞ்சய் காந்தி, B.Ed.,  மாணவர், ஸ்ரீ கிருஷ்ணா கல்வியியல் கல்லூரி, அரக்கோணம், வேலூர் மாவட்டம், தமிழ்நாடு.

Sunday, February 18, 2018

ரயில்களில் குழுவாகச் செல்ல ஆன்லைனில் முன்பதிவு!!!

திருமணம், சுற்றுலா, கல்விச் சுற்றுலா, ஆன்மிகச்சுற்றுலா உள்ளிட்ட காரணங்களுக்காக ரயில்களில் குழுவாகப் பயணம் செய்ய விரும்புபவர்கள், இனிமேல் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “ரயில்களில் திருமணம், சுற்றுலா உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளுக்குச் செல்ல ரயில் பெட்டியை ஒட்டுமொத்தமாக முன்பதிவு செய்ய முடியும். அவ்வாறு முன்பதிவு செய்பவர்களுக்காக குறிப்பிட்ட ரயில்களில் கூடுதல் ரயில் பெட்டியை ரயில்வே நிர்வாகம் இணைக்கும். அதேபோல், சில அமைப்புகளின் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றுக்கு தனியாகச் சிறப்பு ரயில்களையும் ரயில்வே நிர்வாகம் இயக்குகிறது.

ரயில்பெட்டி அல்லது தனி சிறப்பு ரயிலில் செல்ல விரும்புவோர், ரயில்வே கண்காணிப்பாளர் அல்லது நிலைய அதிகாரியை நேரில் சந்தித்து கடிதம் அளிக்க வேண்டும். பின்னர் அதற்கான முழுத் தொகையையும் செலுத்த வேண்டும். அதற்கான ரசீதை பெற்றுக்கொள்ள வேண்டும். அதன் பிறகு ரயில்வே நிர்வாகம் பரிசீலனையை ஏற்று ரயில் பெட்டியை ஒதுக்கீடு செய்யும். தற்போது இந்த நடைமுறைப்படி, சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் ரயில்களில் கூடுதல் பெட்டிகளை முன்பதிவு செய்துவருகின்றனர். 

ஆனால் இதற்குக் கால தாமதம் ஏற்படுகிறது; அலைச்சல் அதிகரிக்கிறது.எனவே ரயில் பெட்டி அல்லது சிறப்பு ரயில் விடுவதற்கு,ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்ய ரயி்ல்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

இனி குழுவாகச் செல்ல விரும்புவோர் ஆன்லைனில் முன்பதிவு செய்துகொள்ளலாம்”எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ரயிலில் ஒரு தனி பெட்டியை முன்பதிவு செய்வதற்குப் பாதுகாப்புத் தொகையாக 50,000 ரூபாயை ரயில்வே நிர்வாகம் நிர்ணயித்துள்ளது. அதே போல் சிறப்பு ரயில்களுக்கு 18 பெட்டிகளுக்கான தொகையைச் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

Thursday, February 15, 2018

அறிவியல் கண்காட்சியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

அறிவியல் கண்காட்சியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை http://bz.dhunt.in/3d46I?s=a&ss=pd via Dailyhunt

Wednesday, February 14, 2018

TNPSC- Group-IV- 11-02-2018- தற்காலிக விடை டிஎன்பிஎஸ்சி வெளியீடு- (Group - IV Services Answer Key)

வணக்கம்.
                   11-02-2018 ஞாயிற்றுகிழமை நடைபெற்ற TNPSC-Group-IV தற்காலிக விடை TNPSC துறை வெளியீடு.

General Tamil
http://tnpsc.gov.in/anskeys/14_02_2018_CCSE_IV_GT.pdf

General Knowledge
http://tnpsc.gov.in/anskeys/14_02_2018_CCSE_IV_GS.pdf 

General English
http://tnpsc.gov.in/anskeys/14_02_2018_CCSE_IV_GE.pdf

மேலும் தகவலுக்கு TNPSC வலைதளம் காண கீழே கிளிக் செய்யவும்.
http://tnpsc.gov.in/answerkeys_14_02_2018.html

Tuesday, February 13, 2018

சிகா கல்வியியல் கல்லூரி மாணவர்கள்- மண்டல மற்றும் மாவட்ட அளவிலான விளையாட்டு மற்றும் பண்பாட்டுப் போட்டிகளில் முதலிடம் பெற்று சாதனை

   தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் 2017-18 ஆம் கல்வியாண்டில் சென்னையில் நடத்திய மண்டல அளவிலான விளையாட்டு மற்றும் பண்பாட்டுப் போட்டிகளில் சிகா கல்வியியல் கல்லூரி மாணவர்கள் மண்டல அளவில் குண்டு எறிதல் போட்டியில் அ.பார்த்திபனும், இசை கருவிகள் வாசித்தலில் மு.அன்பரசனும் முதல் இடத்தை பெற்றனர்.


       விழுப்பும் மாவட்ட அளவில் குண்டு எறிதல் போட்டியில் அ.பார்த்திபன், இசை கருவிகள் வாசித்தலில் மு.அன்பரசன், பாட்டுப்போட்டியில் க.புருஷோத்தமன் ஆகியோர் முதல் இடத்தையும், பேச்சுப்போட்டியில் தா.சிந்து, கட்டுரைப்போட்டியில் ஜெ.வியோலா, நீளம் தாண்டுதல் போட்டியில் தி.கவிதா ஆகியோர் மூன்றாம் இடத்தையும் பெற்றனர். இம்மாணவர்கள் அனைவரையும் சிகா கல்வி குழுமமும், சிகா கல்வியியல் கல்லூரி முதல்வரும், ஆசிரியர்களும் பாராட்டினார்கள்.




Sunday, February 04, 2018

யு -19 உலகக் கோப்பை வரலாற்று வெற்றி: சச்சின், சேவாக், கோலி வாழ்த்து

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.
யு -19 உலகக் கோப்பையில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கும், ட்ராவிட்டுக்கும் கிரிக்கெட் வீரர்கள் பலர் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 
சச்சின்
சிறந்த கூட்டு முயற்சி. பெரிய கனவு நனவாகியுள்ளது. நமது உலக சாம்பியன்களுக்கு வாழ்த்துகள். நாங்கள் உங்களை நினைத்து பெருமைப்படுகிறோம். ராகுல் டிராவிட் மற்றும் பரஸ் வழிகாட்டுதலுக்கு என்னுடைய வாழ்த்துகள்.
சுரேஷ் ரெய்னா
உலகக் கோப்பை போட்டியில் தோல்வி அடையாத அணியாக சிறந்த விளையாட்டை யு -19 அணி விளையாடியுள்ளது. உங்கள் பணி தற்போதுதான் ஆரம்பித்துள்ளது.  தொடர்ந்து அணியின் வெற்றிக்கு பின்னால் இருந்து உதவிய ராகுல் டிராவிடுக்கு என்னுடைய வாழ்த்துகள்.
சேவாக்
ஒவ்வொரு இந்தியனும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அனைத்து புகழும் இந்த குழந்தைகளுடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட டிராவிடுக்கே சேரும். அவரைப் போன்ற சிறந்த வீரர் உலகக் கோப்பையில் கை வைக்க தகுதியுடையவர்.
விராட் கோலி
என்னே ஒரு வெற்றி.. இதனை  முதற் படியாக எடுத்துக் கொள்ளுங்கள். இந்த தருணத்தை கொண்டாடுங்கள். இன்னும் செல்ல நீண்ட தூரம் இருக்கிறது.
விவிஎஸ் லஷ்மன்
தொடர்ந்து யு -19 உலகப் கோப்பையில் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். அனைவரும் போட்டியின் தீவிரத்தை கடைசி வரை உணர்திருந்தனர். உண்மையாக மறக்கமுடியாத வெற்றி. இந்த நேரத்தை சந்தோஷமாக கொண்டாடுங்கள்.
அனில் கும்ளே
வெற்றி பெற்ற இளம் அணிக்கு வாழ்த்துகள். எல்லா பிரிவுகளிலும் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தினீர்கள்.
அஷ்வின்
யு - 19 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். இந்த தொடர் முழுவதும் அவர்களது விளையாட்டு  எதிர் அணிக்கு வெற்றியை தராத வண்ணம் இரக்கமற்றதாக இருந்தது. இந்திய அணி மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள்
முகமத் கைஃப்
என்ன சிறப்பான தருணம் இந்த வீரர்களுக்கு. அவர்களை நினைத்து பெருமையாக உள்ளது. 18 ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் அடைந்த வெற்றியை நினைவூட்டுகிறார்கள். இந்த வெற்றி ராகுல் டிராவிடின் பெரும் முயற்சி. இந்த வீரர்கள் சிறந்த எதிர்காலத்தை கொண்டுள்ளார்கள்.

Courtesy; The Tamil Hindu.

யு-19 கிரிக்கெட்: இந்திய அணி வரலாற்று சாதனை; 4-வது முறையாக உலகக் கோப்பையை வென்றது

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.

இதற்குமுன் எந்த அணியும் 4முறை உலகக் கோப்பையை வென்றது இல்லை என்ற வரலாற்றை மாற்றி எழுதி இந்திய அணி சாதனை படைத்துள்ளது.




இந்திய அணியின் கல்ராவின் சதம் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடந்தது. மவுண்ட் மவுங்கானி நகரில் உள்ள பே ஓவல் மைதானத்தில் இன்று நடந்த இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரலேலிய அணியை எதிர்கொண்டது இந்திய அணி.

இருஅணிகளும் தலா 3 முறை உலகக்கோப்பையை வென்றுள்ளதால், 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றுவது யார் என்ற தீவிரத்துடன் களமிறங்கின.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் சங்கா பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆடுகளத்தில் இருந்த லேசான ஈரப்பதத்தை பயன்படுத்திக்க கொண்ட இந்திய பந்துவீச்சாளர்கள் போரல், நாகர்கோட்டி தொடக்கத்திலேயே ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி அளித்தனர். 60 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர்கள் பிரையன்ட்(14), எட்வர்ட்ஸ்28), கேப்டன் சங்கா(13) ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதனால், ஆஸ்திரேலிய அணி கடும் நெருக்கடிக்கு ஆளானது. அதன்பின் வந்த மெர்லோ, உப்பல் கூட்டணி நிலைத்து ஆட ஓரளவு ஆஸ்திரேலிய அணி சரிவில் இருந்து மீண்டது.

சிறப்பாக விளையாடிய உப்பலை 34 ரன்களில் வெளியேற்றினார் ராய். அதன்பின் வந்த வீரர்கள் இந்தியப் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறி விரைவாக விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஸ்வீனி(23) , சதர்லாந்து(5) ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதனால், மெர்லோவுக்கு துணையாக ஆட ஆள் இல்லாமல் தவித்தார். இருப்பினும் தாக்குப்பிடித்து அரைசதம் அடித்தார். அதன் பின் நீண்நேரம் நிலைக்காத மெர்லோ 76 ரன்களில் ராய் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
கடைநிலை வீரர்களான ஹோல்ட்(13), இவான்ஸ்(1), ஹேட்லி(1) ஆகியோர் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க 47.2 ஓவர்களில் 216 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இந்திய அணித் தரப்பில் போரல், சிவாசிங், நாகர்கோட்டி, ராய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

ஒவருக்கு 4.34 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற எளிதான ரன் ரேட்டை விரட்டி இந்திய அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் பிபி ஷா, மஞ்சோத் கல்ரா சிறப்பான அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். ஆஸ்திரேலிய பந்துவீச்சை மிகவும் “கூலாக” எதிர்கொண்ட இருவரும் அவ்வப்போது பவுண்டரிகளுக்கு விரட்டி ரன் வேகத்தை அதிகரித்தனர். சிறப்பாக பேட் செய்துவந்த பிபிஷா 29 ரன்களில் சதர்லாந்து பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 71 ரன்கள் சேர்த்தனர்.

அதன்பின், அதிரடி வீரர் கில் களமிறங்கி, கல்ராவுடன் இணைந்தார். அதிரடியாக 3 சிக்சர்களை அடித்து தன் இருப்பை வலுவாக வெளிப்படுத்திய கல்ரா 47 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

அதன்பின் இருவரும் பந்துகளை வீணாக்காமல் ரன்களை சேர்த்ததால் அணியின் ரன் சேர்க்கை வேகமெடுத்தது. நிதானமாக பேட் செய்து வந்த கில் 31 ரன்களில் உப்பல் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 2-வது விக்கெட்டுக்கு இருவரும் 60 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

விக்கெட்டுகளை ஒருபக்கம் வீழ்ந்த போதிலும் கல்ரா தூண்போல் பேட் செய்து சதத்தை நோக்கி முன்னேறினார். 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய விக்கெட் கீப்பர் தேசாய், கல்ராவுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்து பேட் செய்தார். இதனால், இந்திய அணி விரைவாக இலக்கை நோக்கி முன்னேறிச் சென்றது.
இருவரின் லகுவான ரன் சேர்ப்பை ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதிலும் தேசாய், அதிகமான பவுண்டரிகள் அடிக்காமல், ஒன்று, இரண்டு ரன்களாகச் சேர்த்து அணியின் ரன் வேகத்தை உயர்த்தினார்.

அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய இடது கை ஆட்டக்காரர் கல்ரா 101 பந்துகளில் சதம் அடித்தார். வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில், தேசாய் பவுண்டரி அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

38.2 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 220 ரன்கள் சேர்த்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தேசாய் 47 ரன்களுடனும்(5பவுண்டரி), கல்ரா 101 ரன்களுடனும்(8பவுண்டரி, 3 சிக்சர்) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதையடுத்து, உலகக்கோப்பையை 4-வது முறையாக வென்ற அணி என்ற உலக சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.