#

#

#

#

#

#

#

#

#

#

Wednesday, December 30, 2015

Best Phone Under 15000 in India for 2015


Priced at Rs. 14,999. The Asus Zenfone 2 is the affordable yet very capable version of the popular 4GB based Asus Zenfone 2. While this lower priced model has 2GB RAM, the Zenfone 2 still offers class leading specifications and a smooth lag free performance. This is the Android fastest smartphone under Rs. 15,000 in India.
Meizu M2 Note

3.Meizu M2 Note

Meizu may have just entered India, but the company is already pretty well known overseas. The M1 Note was a good phone, but the M2 Note offers value that just cannot be overlooked. It’s the perfect mix of performance and pricing.
This is arguably the most popular smartphone that Lenovo has ever launched in India. Like many others in the market, the K3 Note offers very good value for money and has its strengths in performance and camera quality.
Asus Zenfone 2 Laser

6.Asus Zenfone 2 Laser

Laser assisted auto-focus is the buzzword today, and many are offering it. Asus is taking things a step further though, offering a laser-based camera in the sub-15k and sub-10k price points. You’ll have to deal with the Snapdragon 410, but it’s still worth it
Infocus M810

8.Infocus M810

For a budget of 15K, what you are getting is a smartphone with a rich contrasting display, smooth performance, and an uncluttered UI. The performance of the smartphone is also good. A Qualcomm Snapdragon 801 quad-core processor clocked at 2.5GHz and, 2GB of RAM powers it. The smartphone also has 16GB of built-in storage.
Moto G (3rd Gen)

9.Moto G (3rd Gen)

The third generation of the Moto G is overpriced for the performance or experience that it offers. That still doesn’t take away from the fact that it suits the basic user’s purpose though, which is why it’s on our list of top 10s.
Microsoft Lumia 640XL Dual SIM

10.Microsoft Lumia 640XL Dual SIM

If you are one looking to invest in a Windows Phone, the Lumia 640XL can be your weapon of choice. For its price, the smartphone has a good build, gives users a full day battery life and has a good rear camera. The device houses a 5.7-inch 720p display.

Courtesy: http://www.digit.in/top-products/best-budget-smartphones-11.html


Wednesday, December 23, 2015

SIGA COLLEGE OF EDUCATION- REOPEN AFTER TEACHING PRACTICE.

Attention to Students,
                                      Our college reopen after completing teaching practice on 05-01-2016. 

Happy New Year wishes to All.
happy new year க்கான பட முடிவு
 

Tuesday, December 22, 2015

கணித மேதை சீனிவாச இராமானுஜன்- பிறந்த தினம்- டிசம்பர் 22.



பிறப்பு திசம்பர் 22, 1887
பிறப்பிடம் ஈரோடு, சென்னை மாகாணம்
இறப்பு ஏப்ரல் 26, 1920 (அகவை 32)
இறப்பிடம் சேத்துப்பட்டு (சென்னை), சென்னை, சென்னை மாகாணம்
வாழிடம் கும்பகோணம்
தேசியம் இந்தியர்
துறை கணிதம்
கல்வி கற்ற இடங்கள் கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி
பச்சையப்பன் கல்லூரி
அறியப்படுவது Landau–Ramanujan constant
Mock theta functions
Ramanujan conjecture
Ramanujan prime
Ramanujan–Soldner constant
Ramanujan theta function
இராமானுசன் கூட்டு
Rogers–Ramanujan identities
Ramanujan's master theorem
தாக்கம் ஜி. எச். ஹார்டி
சமயம் இந்து சமயம்
ஒப்பம் இராமானுசன்'s signature
இராமானுசன் அவர்களுக்கு கணிதத்தில் மிகுதியான ஆர்வமும், தனிச்சிறப்பு தன்மையும் இருந்தது. அவர் 20 ஆம் நூற்றாண்டின் உலகத்தை வியக்கச் செய்த ஒப்பரிய பெரும் கணித மேதையாக திகழ்ந்தார். இராமானுசன் அவர்களின் குறிப்பிடத்தக்க கணிதத் தேற்றங்களில் சில – ‘எண்களின் பகுப்பாய்வு கோட்பாடு’, ‘நீள்வளையச்சார்புகள்’,  ‘தொடரும் பின்னங்கள்’, மற்றும் ‘முடிவிலா தொடர்’.
பிறப்பு
ஸ்ரீனிவாச ஐயங்கார் ராமானுஜன் அவர்கள் தமிழ்நாட்டிலுள்ள ஈரோடு மாவட்டத்தில் டிசம்பர் 22ஆம் தேதி, 1887ல் பிறந்தார். அவரது தந்தை கும்பகோணத்திலுள்ள ஒரு துணி வியாபாரியின் கடையில் குமாஸ்தாவாக பணியாற்றினார்.
ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்
ராமானுஜன் அவர்கள் தனது ஐந்தாம் வயதில், கும்பகோணத்திலுள்ள ஆரம்ப பள்ளிக்குச் சென்றார். 1898ல், தனது 10 ஆம் வயதில்,  அவர் கும்பகோணத்திலுள்ள டவுன் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். தனது பதினொரு வயதில், அவர் தன் வீட்டில் குடியிருந்த இரண்டு கல்லூரி மாணவர்களிடமிருந்து எஸ்.எல்.லோனி அவர்கள் எழுதிய மேம்பட்ட கோணவியல் புத்தகத்தை வாங்கிப் படித்தார். அப்புத்தகத்தை, அவர் தன் பதிமூன்று வயதிலேயே முற்றும் கற்றுத் தேர்ச்சியடைந்தார். ராமானுஜன் அவர்கள், உயர்நிலை பள்ளியில் கல்வியில் சிறந்த மாணவனாக விளங்கி பல பரிசுகள் வென்றார்.
கணிதத்தின் மீது ராமானுஜருக்கு ஏற்பட்ட பற்று
தனது பதினாறு வயதில் அவர் பெற்ற “எ சினாப்சிஸ் ஆஃப் எலமெண்டரி ரிசல்ட்ஸ் இன் ப்யூர் அண்ட் அப்லைட் மாதேமேட்டிக்ஸ்”  என்ற புத்தகமே அவருடைய வாழ்வில் ஒரு திருப்புமுனையாக இருந்தது. அப்புத்தகம் எளிதான ஆயிரக்கணக்கான கணித முடிவுகளின் ஒரு தொகுப்பாகும். இந்த புத்தகமே கணிதத்தின் மீது ராமானுஜன் அவர்கள் வைத்திருந்த ஆர்வத்தை இன்னும் மேம்படுத்தியது. அவர், அப்புத்தகத்தில் பல கணித முடிவுகளை ஆய்வு செய்து அப்பாற்பட்ட விளைவுகளை வெளிக்கொண்டு வந்தார். 1904ல்,  ராமானுஜன் அவர்கள் கணிதத்தில் ஆழ்ந்த ஆராய்ச்சியை மேற்கொண்டார். அவர், தொடர் (1/n)ஐ ஆய்வு செய்து, 15 தசம இடங்களுக்கு ஆய்லரின் மாறிலியைக் கணக்கிட்டார். பெர்னோலியின் எண்கள் அவரது சொந்த சுயாதீனமான கண்டுபிடிப்பாக இருந்தாலும், அதை அவர் தொடர்ந்து படிக்கத் தொடங்கினார். கும்பகோணம் அரசு கல்லூரி, அவருக்கு 1904 ஆம் ஆண்டில் உதவித்தொகை வழங்கியது. ஆனால், அவர் கணிதத்தின் மீது வைத்திருந்த பற்றால், மற்ற பாடங்களில் தேர்ச்சிப் பெறாமல் கல்லூரி தேர்வில் தோல்வியுற்றார். இதன் காரணமாக அவர் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டார்.
  நண்பர்களின் உதவியாலும், கணித கண்டுபிடிப்புகளை பூர்த்தி செய்தும், தனது கண்டுபிடிப்பகளுக்கு ஆதரவு கோரியும் அவர் தன் வாழ்கையை நடத்தினார். 1906ல், ராமானுஜன் அவர்கள் சென்னையிலுள்ள பச்சையப்பா கல்லூரியில் சேர்ந்தார். சென்னை பல்கலைக்கழகத்தில் சேர வேண்டுமென்ற ஆர்வம் அவருக்கு இருந்ததால், முதல் கலை தேர்வில் தேர்ச்சிப் பெற வேண்டுமென்ற நோக்கம் கொண்டிருந்தார். தனது கணித வேலையின் தொடர்ச்சியாக ராமானுஜன் அவர்கள் 1908ல் தொடரும் பின்னங்கள் மற்றும் மாறுபட்ட தொடரைப் படித்தார். இச்சூழ்நிலையில் அவரது உடல்நிலை குன்றி தீவிரமாக பாதிக்கப்பட்டதால், 1909ல் அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதிலுருந்து மீண்டு வர அவருக்கு குறுகிய காலம் தேவைப்பட்டது.
இல்லற வாழ்க்கை
பத்து வயது பெண்னான எஸ்.ஜானகி அம்மாள் அவர்களை, ஜூலை மாதம் 14 ஆம் தேதி, 1909ல் ராமானுஜன் அவர்கள் திருமணம் செய்தார். இந்த காலத்தில் தனது முதல் படைப்பான ‘பதினேழு பக்க பெர்னோலியின் எண்களை’ வெளியிட்டார். இது 1911ல், ‘இந்திய கணித சங்கம்’ என்ற இதழில் வெளியானது.
ராமானுஜர் மேற்கொண்ட பணிகள்
1911ல் ராமானுஜன் அவர்கள், இந்திய கணித கழகத்தின் நிறுவனரை தனது வேலை ஆலோசனைக்காக அணுகினார். இந்திய கணித மேதை ராமச்சந்திர ராவ் உதவியதால், அவருக்கு சென்னை துறைமுகத்தில் குமாஸ்தா வேலை கிடைத்தது. சென்னை பொறியியல் கல்லூரியில் கட்டடப் பொறியியல் பேராசிரியராக இருந்த சி.எல்.டி. கிரிப்பித் என்பவர் ராமானுஜன் அவர்களின் திறமைகளில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். அவர் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் கல்வி கற்றதால், அங்குள்ள கணித பேராசிரியர், எம்.ஜே.எம். ஹில் என்பவரை அவருக்குத் தெரியும். அதனால், அவர் 1911ல் வெளியான ராமானுஜன் அவர்களின் பெர்னோலியின் எண்களின் சில நகலை நவம்பர் 12ஆம் தேதி, 1912 ஆம் ஆண்டு ஹில்லுக்கு அனுப்பி வைத்தார். ஹில் அவர்கள், அதை ஊக்குவிக்கும் வகையில், ராமானுஜத்தின் ‘வேறுபட்ட தொடர் முடிவுகள் (Results On Divergent Series) புரிந்து கொள்ளும் அளவிற்கு இல்லை’ என்று பதிலளித்தார். 1910ல் வெளியான ராமானுஜன் அவர்களின் ‘முடிவிலியின் வகைமுறை’ (Orders Of Infinity ) புத்தகத்தின் நகலை, ஜி.ஹெச். ஹார்டி என்பவருக்கு ராமானுஜர் அனுப்பி வைத்தார். ராமானுஜன் அவர்கள் கடிதத்துடன் இணைத்த மெய்ப்பிக்கப்படாத தேற்றங்களின் நீண்ட பட்டியலை, ஹார்டி,  லிட்டில்வுட் என்பவருடன் இணைந்துப் படித்தார். ராமானுஜன் அவர்களின் தேற்றங்கள் தெளிவாக புரிந்தால், ஹார்டி அவருடன் சேர்ந்து பணிபுரிய விரும்புவதாக பதில் கடிதம் எழுதினார்.
கணிதத்தில் ராமனுஜரின் சாதனைகள்
மே மாதம் 1913ல், சென்னை பல்கலைக்கழகம் ராமானுஜன் அவர்களுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கான உதவித்தொகை வழங்கியது. 1914ல், ராமானுஜத்தின்  அசாதாரண ஒத்துழைப்பை இணைந்து தொடங்குவதற்காக கேம்ப்ரிட்ஜிலுள்ள ட்ரினிட்டி கல்லூரிக்கு அவரை வரவழைத்தார். ஹார்டி மற்றும் ராமானுஜன் அவர்களின் கூட்டணி பல முக்கியமான ஆய்வுகளுக்கு வழிவகுத்தது. ஹார்டி அவர்களுடனான கூட்டு அறிக்கையில், ராமானுஜன் அவர்கள் ‘ப(n) என்ற அணுகுமுறையின் சூத்திரத்தைக்’ (Asymptotic Formula for p(n)) கொடுத்தார்.  இந்த ப(n) சரியான மதிப்பைக் கொடுக்கும் தன்மையைக் கொண்டது. பின்னர், ரேட்மேக்கர் என்பவர் இதனை நிரூபித்தார்.
லண்டனில் குடியேற ராமானுஜன் அவர்களுக்கு பல பிரச்சினைகள் இருந்தது. அவர் ஒரு ஆச்சாரமான பிராமண குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால், ஆரம்பத்திலிருந்து அவருக்கு உணவு பிரச்சினைகளும் இருந்தது. ராமானுஜன் அவர்களுக்கு நீண்ட காலமாகவே உடல்நல பிரச்சினைகள் இருந்ததால், முதல் உலக போர் வெடித்தபோது உணவுப் பொருட்கள் கிடைக்க மிகவும் அவதிப்பட்டார்.
மார்ச் 16, 1916 ஆம் ஆண்டு ராமானுஜன் அவர்கள் அறிவியலில் ஆராய்ச்சிக்கான இளங்கலை பட்டத்தைக் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் மூலமாக பெற்றார். அவருக்கு சரியான தகுதிகள் இல்லாத போதிலும் 1914 ஜூனில் நடந்த சேர்ப்பில் அனுமதிக்கப்பட்டார். ராமானுஜத்தின் ஏழு ஆவணங்களைக் கொண்ட உயர் கலப்பு எண்களின் (Highly Composite Numbers) விளக்கவுரை இங்கிலாந்தில் வெளியிடப்பட்டது.
இறப்பு
1917ல், ராமானுஜன் அவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டார், ஆகவே, அவரது மருத்துவர்கள் அவர் இறந்துவிட கூடும் என்று அஞ்சினர். செப்டம்பரில் அவருடைய உடல்நிலை சிறிதளவு மேம்பட்டாலும்,  அவர் தனது பெரும்பாலான நேரத்தைப் பல்வேறு மருத்துவமனைகளிலேயே செலவிட்டார். பிப்ரவரி 18, 1918ல், கேம்பிரிட்ஜ் ஃபிலோசஃபிக்கல் சொசைட்டியின் ஒரு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், லண்டன் ராயல் சொசைட்டியும் அவரைத் தேர்ந்தெடுத்தது.
1918ஆம் ஆண்டு, நவம்பர்  இறுதியில் ராமானுஜன் அவர்களின் உடல்நிலை பெரிதும் மேம்பட்டது. பின்னர், அவர் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி 1919ஆம் ஆண்டு கடல்வழியாக இந்தியா புறப்பட்டு மார்ச் 13 ம் தேதி வந்து சேர்ந்தார். மருத்துவ சிகிச்சை இருந்த போதிலும், அவரது உடல்நலம் குன்றியதால், ஏப்ரல் 6, 1920 அன்று இறந்தார்

சிறப்புக்கள்

  • 1918 ஆம் ஆண்டில் லண்டன் ராயல் சொசைட்டியின் உறுப்பினர் ஆனார் (எஃப்.ஆர்.எஸ் பட்டம்).
  • கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டிரினிட்டி கல்லூரியின் ஃபெல்லோசிப் இவருக்குக் கிடைத்தது.
  • ராமானுஜன் ஆய்வுகளில் "தியரி ஆஃப் ஈகுவேசன்ஸ்", "தியரி ஆஃப் நம்பர்ஸ்", "டெஃபினிட் இன்ட்டக்ரல்ஸ்", "தியரி ஆஃப் பார்டிஷன்ஸ்", "எலிப்டிக் ஃபங்ஷன்ஸ் அண்ட் கண்டினியூடு ஃப்ராக்சன்ஸ்" எனும் நிலைப்பாடுகள் மிகச் சிறந்தவைகளாகக் கருதப்படுகின்றன.
  • இவருடைய "மாக் தீட்டா ஃபங்சன்ஸ்" எனும் ஆராய்ச்சி முடிவுகள் சிறப்பான ஒன்றாகும்.
  • கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் இவரது மரணத்துக்குப் பின் இவருடைய ஆய்வுக் கட்டுரைகள் அனைத்தையும் தொகுத்து புத்தகமாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது.

 Courtesy: Wikipedia and Itstamil

Friday, December 11, 2015

Chennai Flood-2015

A Visit to Chennai flood Affected Areas | Chennai Flood 2015 | Tamil The Hindu

Courtesy: The Tamil Hindu

Tuesday, December 08, 2015

School Internship (4 Weeks)- B.Ed. (2015-16)

School Internship (4 Weeks)
- Observation of Mentor Classes Level - I & Level - II
- Identifying and Analysing the Diverse Needs of the Learners
- Exploring and Preparing Teaching Learning Materials (TLM) for Level -I & Level - II
- Reflections on Continuous and Comprehensive Evaluation (CCE) practiced in Co-operative Schools
- Assessing and reporting on the Environment context of Co-operative Schools.
- Organisation of Study Circles / Science Clubs / Forums with respect to the nature of the basic subject of    student -teachers
- Interactions with School Administrators, Teachers, Parents and Community
- Analysing and Reflecting on the School Textbooks of Level - I & Level - II

Observation Records
a) Observation Record : Level - I
             (10 Observation of Mentor Teacher Classes @ 2 Observations X 5 School Subjects)
b) Observation Record : Level - II
         (10 Observation of Mentor Teacher Classes pertaining to the basic Subject of the student-teachers)

நடைபெறவுள்ள மார்ச் 2016 மேல்நிலைப் பொதுத் தேர்விற்கு தனித்தேர்வர்கள் அரசுத் தேர்வுகள் சேவை மையங்களின் மூலம் விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை மீண்டும் நீட்டித்து 11.12.2015 வரை விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கப்படுகிறது.

தனித்தேர்வர்கள் விண்ணப்பித்திட கால அவகாசம் நீட்டிப்பு | நடைபெறவுள்ள மார்ச் 2016 மேல்நிலைப் பொதுத் தேர்விற்கு தனித்தேர்வர்கள் அரசுத் தேர்வுகள் சேவை மையங்களின் மூலம் 16.11.2015 முதல் 27.11.2015 வரையிலான நாட்களில் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. தொடர் மழை
காரணமாக 28.11.2015 முதல் 04.12.2015 வரை கால அவகாசம் நீட்டித்து வழங்கப்பட்டது இருப்பினும், அத்தேதிகளிலும் பெரும்மழை காரணமாக தேர்வர்கள் விண்ணப்பிக்க இயலாத சூழ்நிலையில் தனித்தேர்வர்கள் நலனைக் கருத்தில் கொண்டு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை மீண்டும் நீட்டித்து 11.12.2015 வரை விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கப்படுகிறது. ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களின்  மூலமாக மட்டுமே ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்பதால் www.tndge.in என்ற இணையதளத்திற்கு சென்று சேவை மையங்களின்விவரத்தை அறிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Courtesy: Kalvisolai

சென்னை வெள்ளம்: உ.பி. முதல்வர் ரூ.25 கோடி நிதியுதவி


அகிலேஷ் யாதவ் | கோப்புப் படம்.

சென்னை வெள்ள நிவாரணப் பணிக்காக உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் ரூ.25 கோடி நிதியுதவி அறிவித்துள்ளார். 

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங் களில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
சென்னை வெள்ள நிவாரணப் பணிகளுக்காக கர்நாடகம், பிஹார், ஒடிஸா மாநில அரசுகள் தலா ரூ.5 கோடி நிவாரண உதவி வழங்கி உள்ளன.
இந்த வரிசையில் உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், சென்னை வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ரூ.25 கோடி நிதியுதவியை அறிவித்துள்ளார். 
இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், சென்னையில் மேற்கொள்ளப்படும் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு உதவிடும் வகையில் ரூ.25 கோடி வழங்கப்படும். வெள்ளத்தை சமாளிக்க போராடிய ராணுவத் தினர், தன்னார்வலர்களை பாராட்டு கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ஷாருக்கான் ரூ.1 கோடி உதவி
இந்தி நடிகர் ஷாருக்கான் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ரூ.1 கோடி நிதியுதவியை வழங்கியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக முதல் வருக்கு ஷாருக்கான் எழுதியுள்ள கடிதத்தில், சென்னையில் நேரிட்ட இயற்கை பேரழிவால் மிகுந்த வேதனை அடைந்துள்ளேன். எனினும் இந்த நேரத்தில் மக்களின் மனிதாபிமானம் என்னை பெருமையடையச் செய்கிறது. எங்களது நிவாரண உதவியை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். 

Courtesy : The Tamil Hindu

Tuesday, June 23, 2015

2005-க்கு முன்பான ரூபாய் நோட்டுகளை வரும் 30-க்குள் மாற்றிக்கொள்ள ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்

கடந்த 2005-ம் ஆண்டுக்கு முன்பு அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள், வரும் 30-ம் தேதிக்குள் அவற்றை மாற்றிக்கொள்ள வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
பழைய ரூபாய் நோட்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டாம் என வங்கிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கள்ள நோட்டு புழக்கத்தையும் கருப்புப் பணத்தையும் தடுப்பதற் காக கடந்த ஆண்டு முக்கிய அறிவிப்பை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அதன்படி, 2005-ம் ஆண்டுக்கு முன்பு அச்சடிக் கப்பட்ட ரூ.500, ரூ.1,000 உள் ளிட்ட அனைத்து ரூபாய் நோட்டு களையும் செல்லாததாக அறிவித் தது. இந்த ரூபாய் நோட்டுக்களை வைத்திருப்பவர்கள் அவற்றை வங்கிகளில் செலுத்தி மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியது. அதற்கான காலக்கெடு, ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. 
கோப்புப் படம்.
இந்நிலையில், வரும் 30-ம் தேதிக் குள் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளுமாறு ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து, ரிசர்வ் வங்கி கூறியிருப்பதாவது:
இந்தியாவில் 2005-ம் ஆண்டுக்கு முன்பு வரை அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளில் பாதுகாப்பு அம்சங்கள் மிகக் குறைவாக உள்ளன. இதனால், அதிகளவில் கள்ளநோட்டுகள் அச்சடிக்கப்பட் டன. இதைத் தடுப்பதற்காக, 2005-ம் ஆண்டுக்குப் பிறகு அச்சடித்து வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுகளில் அதிகளவில் பாது காப்பு அம்சங்கள் இடம் பெற்றுள் ளன. எனவே, பொதுமக்களின் நலன் கருதி, 2005-க்கு முன்பு அச்சிடப் பட்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற முடிவு மேற்கொள்ளப்பட்டது.
ரூபாய் நோட்டுகளின் பின்புறத் தில் அது அச்சடிக்கப்பட்ட ஆண்டு விவரம் இடம் பெற்றிருக்கும். ஆனால், 2005-க்கு முன்பு வெளி யிடப்பட்ட ரூபாய் நோட்டுகளில் ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்காது. இதை வைத்து அந்த ரூபாய் நோட்டுகளை கண்டுபிடிக்கலாம்.
இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 
COURTESY: The Tamil Hindu

Monday, April 13, 2015

சிகா கல்வியியல் கல்லூரி மாணவர் இளஞ்செழியன்- மாநில அளவில் உயரம் தாண்டுதலில் இரண்டாம் இடம்

சிகா கல்வியியல் கல்லூரி

      விழுப்புரம் மாவட்டம் காப்பியாம்புலியூரில் அமைந்துள்ள சிகா கல்வியியல் கல்லூரியில் பி.எட் படிக்கும் மாணவர்  E.இளஞ்செழியன். தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் சென்னையில்  மாநில அளவில் நடத்திய விளையாட்டுப் போட்டிகளில் உயரம் தாண்டும் போட்டியில் மாநில அளவில் இரண்டாவதாக வந்து சாதனை படைத்துள்ளார். கல்லூரி நிர்வாகம், முதல்வர் மற்றும் உதவி பேராசியர்கள் மாணவர்க்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Thursday, March 19, 2015

தொடரும் ஆதிக்கம்: அபார வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா

தொடரும் ஆதிக்கம்: அபார வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா

உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் வங்கதேச அணியை 109 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. 

ஆட்ட நாயகனாக, தன் வாழ்நாளில் மிக முக்கியமான தருணத்தில் சதம் அடித்துக் கொடுத்து வெற்றிக்கு வித்திட்ட ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.

தோனியின் கேப்டன்சியில் ஒருநாள் போட்டிகளில் இந்தியா பெறும் 100-வது வெற்றி.

மேலும், நடப்பு உலகக் கோப்பையில் 7 போட்டிகளில் இந்தியா 70 விக்கெட்டுகள், அனைத்து அணிகளையும் இந்தியா ஆல் அவுட் செய்துள்ளது
இந்திய அணி வீரர்கள் உற்சாகம். | படம்: ஏ.பி.