#

#

#

#

#

#

#

#

#

#

Thursday, December 15, 2016

உலகின் செல்வாக்கு மிக்க முதல் 10 தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடிக்கு 9வது இடம்....

உலகின் செல்வாக்கு மிக்க முதல் 10 தலைவர்களின் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி இடம்பெற்றுள்ளார். 

2016-ஆம் ஆண்டுக்கான உலகின் செல்வாக்கு மிக்க 74 தலைவர்களின் பட்டியலை அமெரிக்காவின் "ஃபோர்ப்ஸ்' பத்திரிகை புதன்கிழமை வெளியிட்டுள்ளது. அதில், முதல் 10 இடங்களில் பிரதமர் மோடி, 9-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இதுதொடர்பாக, அந்தப் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:


130 கோடி மக்கள்தொகைக் கொண்ட இந்தியாவில், நாட்டின் செல்வாக்கு மிக்க தலைவராக பிரதமர் மோடி திகழ்கிறார். சமீப காலமாக, அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா, சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகியோரை அலுவல்பூர்வமாக சந்தித்து, ஒரு சர்வதேசத் தலைவராக மோடி தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். மேலும், பருவநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்காக, சர்வதேச அளவில் முயற்சிகள் மேற்கொண்டு வரும் முக்கியத் தலைவராகவும் மோடி விளங்குகிறார்.
இது மட்டுமின்றி, கருப்புப் பணம், கள்ளப் பணம், பயங்கரவாதம் ஆகியவற்றை ஒழிப்பதற்காக, இந்தியாவில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்றும் கடந்த மாதம் அதிரடியாக அறிவித்தார். 740 கோடி மக்களைக் கொண்ட இந்தப் பூமிப் பந்தில், 74 தலைவர்கள் உலகை மாற்றியமைக்கும் வல்லமையுடன் திகழ்கிறார்கள் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செல்வாக்கு மிக்க தலைவர்களின் பட்டியலில், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், தொடர்ந்து 4-ஆவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளார். அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

அவருக்கு அடுத்தபடியாக, உலகின் செல்வாக்கு மிக்க பெண் தலைவராக, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல், 3-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். அதைத் தொடர்ந்து, சீன அதிபர் ஜீ ஜின்பிங் (4-ஆவது இடம்), போப் பிரான்சிஸ் (5-ஆவது இடம்), "மைக்ரோசாஃப்ட்' இணை நிறுவனர் பில்கேட்ஸ் (7-ஆவது), "ஃபேஸ்புக்' தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜக்கர்பக் (10-ஆவது இடம்), பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹொலாந்த் (23-ஆவது இடம்), ஆப்பிள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் (32-ஆவது இடம்), வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங்-உன் (43) ஆகிய இடங்களைப் பிடித்துள்ளனர்.
"ஜியோ' 4ஜி சேவையை அறிமுகப்படுத்தி, தகவல் தொடர்புத் துறையில் புரட்சியை ஏற்படுத்தியிருக்கும் ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி, 38-ஆவது இடத்தையும், அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, 48-ஆவது இடத்தையும், "மைக்ரோசாஃப்ட்' நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, 51-ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

Monday, December 12, 2016

பீதியில் பிற டிடிஎச் சேவை வழங்குநர்கள், அம்பானியின் அடுத்த பிளான்!!!!!

இலவசங்களாலும் அதிரடி சலுகைகளாலும் இந்திய தொலைத்தொடர்பு சந்தையை ஒரு கலக்கு கலக்கிய கையேடு சம்பீத்தில் ரிலையன்ஸ் ஜியோவின் தலைவர் முகேஷ் அம்பானி ஜியோ அதன் இலவச சலுகைகளை ஹேப்பி நியூ இயர் சலுகை என்ற பெயரில் நீட்டிக்கப்படுவதாக அறிவித்து வாடிக்கையாளர்களின் வயிற்றில் பாலை வாற்றார் மறுபக்கம் போட்டியாளர்களின் வயிற்றில் புளியை கரைத்தார். அதே கையோடு ரிலையன்ஸ் ஜியோ டிடிஎச் சேவை சார்ந்த தகவலை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது சார்ந்த எந்த விதமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் கூட ஜியோ டிடிஎச் சேவைகள் விரைவில் சந்தைக்குள் நுழைவது உறுதியாகிவிட்ட பட்சத்தில் இப்போதே டிஷ்டிவி, டாடாஸ்கை, ஏர்டெல் டிடிஎச் மற்றும் ஆக்ட் பைபர்நெட் போன்ற டிடிஎச் சேவை வழங்குநர்கள் முகேஷ் அம்பானியின் அடுத்த அதிரடி என்னவாக இருக்கும் என்று யோசித்து யோசித்து தூக்கம் தொலைக்க ஆரம்பித்து விட்டனர். அது சரி முகேஷ் அம்பானியின் அடுத்த அதிரடி என்னவாக இருக்கும்..?? ஜியோ டிடிஎச் சேவையால் என்ன கொண்டு வர முடியும்.?

டிசம்பர் 15 அன்று எங்களின் முந்தைய அறிக்கைப்படி மற்றும் பிற ஊடக வதந்திகளின் படி, ரிலையன்ஸ் ஜியோ டிசம்பர் 15 அன்று அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் அதிகாரப்பூர்வமாக அதன் டிடிஎச் சேவையை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது (இப்போது வரையிலாக எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை)

ஆண்ட்ராய்டு செட்-டாப் பாக்ஸ் அதுமட்டுமின்றி நிறுவனத்தின் டிடிஎச் சேவையானது மற்ற டிடிஎச் சேவை வழங்குநர்களுக்கு இடையூறு செய்யும் வண்ணம் ஆண்ட்ராய்டு மூலம் இயங்கும் செட்-டாப் பாக்ஸ்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் வதந்தி நிலவுகிறது. உடன் ஜியோ செட் டாப் பாக்ஸ்கள் கூகிள் ப்ளே உடன் இணைக்கப்பட்டிருக்கும் ஆக அதில் ப்ரீ இன்ஸ்டால்ட்டு ஆப்ஸ்கள் மற்றும் கேம்கள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அனைத்திற்கும் மேலாகஜியோ டிடிஎச் சேவையானது 300+ சேனல்கள் வரை வழங்குமாம்.

வெளியாகும் முன்பே விளைவுகள் வெளியாகப்போகும் ஜியோ டிடிஎச் சேவையை மனதில் கொண்டு கிராமப்புற இந்தியா உட்பட நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் செல்லும் பொருட்டு பிராந்திய மொழி உள்ளடக்கத்தில் அதிகம் கவனம் செலுத்தும் டிஷ்டிவி சமீபத்தில் அதன் பயனர்களுக்கு பல புதிய எச்டி பிராந்திய சேனல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

நடவடிக்கை அதுமட்டுமின்றி, இப்போது இந்தியாவின் மிகப்பெரிய டிடிஎச் சேவை வழங்குநர் ஆக விளங்கும் வீடியோகான் டி2எச் உடன் டிஷ்டிவி இணைந்துள்ளது. இங்கே கேள்வி என்னெவென்றால் இந்த நடவடிக்கை சந்தையில் எடுக்க காரணம் வரவிருக்கும் ரிலையன்ஸ் ஜியோ சேவையை தாக்குவதற்க்கா.? என்பது தான்.

ஏர்டெல் என்ன செய்கிறது.? ஏர்டெல் டிஜிட்டல் டிவி, பிராட்பேண்ட் துறையில் பெரிய சவாலாக வளர்ந்து நிற்கிறது. இந்நிறுவம் சமீபத்தில் அதன் 21 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மற்ற டிடிஎச் வழங்குநர்களுடன் ஏற்கனவே ஒரு கடுமையான போட்டியில் இருக்கும் ஏர்டெல், அடுத்து புதிதாக களமிறங்கும் ரிலையன்ஸ் ஜியோ டிடிஎச் சேவைக்கு ஈடு கொடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஒப்பிடும்போது ஏர்டெல் சேவையில் ஈடுகொடுத்தாலும் மிக கட்டண அளவீடுகளை கொண்டுள்ளதால், ஜியோ எளிமையாக ஏர்டெல் சேவையை பின்தள்ளும் என்றும் வதந்திகள் படி, ஏர்டெல் உடன் ஒப்பிடும்போது ஜியோவின் சேவை கட்டண அளவீடுகள் பாதி தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

டாடாஸ்கை நிலை என்ன.? ஜியோவை ஏர்டெல் சமாளிக்கும் என்ற நம்பிக்கை ஒருபக்கமிருக்க, டாடாஸ்கை - நாட்டின் சிறந்த சேவை வழங்குநர்களில் ஒன்றாக இருந்து வருகிறது மற்றும் மற்ற டிடிஎச் வழங்குநர்களுடன் ஒப்பிடுகையில் டாடாஸ்கை 65 பிரத்தியேக சேனல்களை அளிகப்பது குறிப்பிடத்தக்கது. ஆக, ஜியோ டிடிஎச் சேவைக்கு எதிர்பாராத ஒரு போட்டியை டாடாஸ்கை எதிர் நிற்கலாம்.


Friday, December 09, 2016

SBI ஏ டி எம் அட்டையை பாதுகாக்க அதிநவீன வசதி அறிமுகம்!!!

SBI தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளைஎளிமைப்படுத்தி வழங்கிவரும் அதே வேளையில் வாடிக்கையாளர்கள்தங்கள் பணத்தை பாதுகாப்பாக கையாளவும் சில வசதிகளை அறிமுகம்செய்துவருகிறது.


உயர் பண மதிப்பிழப்பு அறிவிப்பு வெளியானது முதலே பலர் தங்களதுபண அட்டையை (ATM) வைத்துதான் அன்றாட தேவைகளை பூர்த்திசெய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்பண அட்டைகளைஅதிகமாக பாமர மக்களும் பயன்படுத்த துவங்கியுள்ள வேளையில்சைபர் உலகின் தாக்குதலில் இருந்து வாடிக்கையாளர்களை காக்க ATM அட்டையை தேவையேற்படும் போது ON / OFF செய்யும் வசதியைஅறிமுகம் செய்துள்ளது.



Androidமொபைல்Playstoreல்கிடைக்கும்SBIQuick செயலியின் மூலம்ஏற்கெனவே வங்கி இருப்புசிறு அறிக்கை போன்ற சேவைகளை மிஸ்டுகால் மற்றும் குறுந்தகவல் மூலமாக பெற்றுவருகிறோம்கூடுதலாகதற்போது ATM அட்டையை பணம் எடுக்கும்போதும்பொருட்களைவாங்கும்போதும் மொபைலில் ATM அட்டையை ON செய்து பிறகுஅட்டையின் தேவை இல்லாத போது அட்டையை யாரும் பயன்படுத்தாதவகையில் OFF செய்து வைத்துவிடலாம்.

Note: Every time for on or off deduct Rs 1.50 

நீட் தேர்வை தமிழிலும் எழுதலாம்: மத்திய அரசு அறிவிப்பு

மருத்துவப் படிப்புக்கான நீட் பொதுநுழைவுத் தேர்வை தமிழிலும் எழுதலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மருத்துவப் படிப்புக்கான நீட் பொதுநுழைவுத் தேர்வை தமிழ், அசாமி, குஜராத்தி, தெலுங்கு, பெங்காலி ஆகிய மொழிகளிலும் எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.டெல்லியில் இதுகுறித்த அறிவிப்பை சுகாதாரத்துறை இணைஅமைச்சர் அனுப்ரியா படேல் தெரிவித்தாக தகவல் வெளியாகியுள்ளது.

12-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தாலும், மருத்துவம் பயில தனியாக நீட் எனும் பொதுநுழைவுத் தேர்வை மாணவர்கள் எழுத வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது கடும் சர்ச்சைகளை கிளப்பியது. 
இந்நிலையில், நீட்(NEET) தேர்வை தமிழ் உட்பட பிராந்திய மொழிகளிலும் எழுதலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ், குஜராத்தி, அசாமி, தெலுங்கு, பெங்காலி, மராத்தி உட்பட மொழிகளில் நீட் பொதுநுழைவுத் தேர்வை எழுத முடியும். ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் தேர்வெழுதுவது நடைமுறையில் உள்ளது.

Wednesday, December 07, 2016

சரித்திரம் தன்னில் நிற்பார்- ஜெயலலிதா


வாழ்க்கை முழுவதும் குழந்தைப்பருவத்திலிருந்து பள்ளிக்கூடப்பருவம், சினிமா, அரசியல் என்று எல்லாக் காலக்கட்டங்களிலும் பல்வேறு போராட்டங்களை சந்தித்து, எல்லா போராட்டங்களிலும் ‘வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்’ என்று பரணி பாடிய ஜெயலலிதா, கடந்த 75 நாட்களாக முதன்முறையாக மரணப்போராட்டத்தில், தோல்வியடைந்து இவ்வுலகைவிட்டு மறைந்துவிட்டார். முதல்முறையாக அவர் சந்தித்த ஒரு தோல்வியென்றால், அது இதுவாகத்தான் இருக்கும். 1948–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24–ந் தேதி கர்நாடக மாநிலத்தில் ஜெயலலிதா பிறந்தார். செல்வச்செழிப்போடு பிறந்த ஜெயலலிதா, கைக்குழந்தையாக இருக்கும்போதே தந்தையை இழந்தார். அந்தப்பருவத்திலேயே ஏழ்மையை சந்தித்தார். அதன்பிறகு அவரது தாயார் சந்தியா, சினிமாவில் நடிக்கத்தொடங்கி அந்த வருமானத்தில் தான் வாழ்க்கை நடந்தது. 

ஜெயலலிதா சிறுவயதில் பெங்களூருவில் உள்ள, பிஷப் காட்டன் பள்ளிக்கூடத்திலும் தொடர்ந்து சென்னை சர்ச்பார்க் கான்வென்டிலும் படித்தார். படிப்பில் படுசுட்டியாக விளங்கிய ஜெயலலிதா, தான் ஒரு பிரபல வக்கீலாக வேண்டும் என்ற குறிக்கோளோடு இருந்தார். ஆனால், காலம் வேறு கணக்குப்போட்டு விட்டது. பள்ளிப்படிப்பை முடித்தவுடன், ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியில் சேரவேண்டிய அவர், விருப்பமில்லாமலே, சினிமா வாழ்க்கையில் நுழைந்தார். எப்படி படிப்பில் ஜொலித்தாரோ அதுபோல, சினிமா வாழ்க்கையிலும் ஒளிமிகுந்த நட்சத்திரமாக ஜொலித்து, 120–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். அதன்பிறகு அவர் நினைக்காமலேயே அரசியலில் நுழைய வேண்டிய நிலை அமைந்தது. 1982–ல் அ.தி.மு.க.வில் சேர்ந்தார். அந்தக்கட்சியின் கொள்கைப்பரப்பு செயலாளராக தமிழகம் முழுவதும் வலம் வந்தார். 1984–ல் டெல்லி மேல்–சபை உறுப்பினரானார். அவருடைய ஆங்கிலப்பேச்சும், இந்தி மொழியிலிருந்த ஆற்றலும், இந்திராகாந்தி முதல் எல்லாத்தலைவர்களையும் கவர்ந்தது. 1987–ல் எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பிறகு, அ.தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பையேற்று, அந்தக்கட்சியை கட்டிக்காத்தார். 1991, 2001, 2011, 2016–ல் நடந்த தேர்தல்களில் வெற்றிப்பெற்று முதல்–அமைச்சர் பொறுப்பை ஏற்றார். தான் நினைத்ததை சாதிக்கும் போராட்டக்குணமுடைய ஜெயலலிதா, மத்திய அரசாங்கத்திடம் பல்வேறு கோரிக்கைகளை வேண்டுகோளாக விடுத்து, நிறைவேறாவிட்டால் போராடி பெற்றுள்ளார். காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட வைத்தது அவருடைய போராட்ட உணர்வுக்கு கிடைத்த வெற்றி தான். இவருடைய ஆட்சியில் பெண்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் எண்ணற்ற நன்மைகள் கிடைத்தன. 

முதன்முறையாக ஆட்சிப்பொறுப்பை ஏற்ற நேரத்தில் 1992–ம் ஆண்டு ‘தினத்தந்தி’யில் வந்த ஒரு செய்தியைப் பார்த்து தான், ‘தொட்டில் குழந்தை’ திட்டத்தைக்கொண்டு வந்தார். ஏறத்தாழ 4,500–க்கும் மேற்பட்ட பெண்குழந்தைகள் இந்தத்திட்டத்தால் உயிர்ப்பிழைத்துள்ளனர். இந்த திட்டத்தை அன்னை தெரசாவே ஜெயலலிதாவின் வீட்டிற்கு வந்து மனதாரப் பாராட்டினார். தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பல மொழிகளில் பேசும் ஆற்றல் கொண்ட ஜெயலலிதா அந்தந்த மாநிலத்தவர்களிடம் அவர்களது தாய்மொழியிலேயே பேசி எல்லோரையும் ஈர்த்தார். மனோதிடம், அன்பு, ஆற்றல், கருணை, துணிவு, மனஉறுதி போன்ற பல குணநலன்களுக்கு சொந்தக்காரரான ஜெயலலிதா ஒரு வெற்றித்திருமகளாகவே வாழ்ந்தார். முதல்–அமைச்சராக, நான்குமுறை பொறுப்பேற்று சாதனைகள் பல புரிந்த அவர் ஒரு சரித்திரமாகிவிட்டார். தமிழக அரசியலில் அவருடைய மறைவு நிச்சயமாக ஒரு வெற்றிடத்தை உருவாக்கிவிட்டது. 

அ.தி.மு.க.வின் அரணாக இருந்து, எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பிறகு அந்தக்கட்சியை போற்றிப்பாதுகாத்து வந்தவர் ஜெயலலிதா. அவரது மறைவு அ.தி.மு.க.வுக்கு மட்டுமல்ல, தமிழகத்துக்கே மிகப்பெரிய இழப்பாகும். ஒட்டுமொத்த தமிழகமே அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறது. ‘வாழ்ந்தவர் கோடி மறைந்தவர்கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார், மாபெரும் வீரர் மானம்காப்போர் சரித்திரம் தனிலே நிற்கின்றார்’ என்ற பாடல், மறைந்த முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த பாடலாகும். இதற்கு மிகவும் பொருத்தமானவர் ஜெயலலிதா. என்றென்றும் மக்களின் மனதிலும் நிற்பார்; சரித்திரம் தன்னிலும் நிற்பார்.

போர்க்கள வாழ்க்கையை பூக்களமாக மாற்றி மகுடம் சூடியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா!

சென்னை : ஜெயலலிதாவின் அரசியல் பாதை முட்களால் நிரம்பியது. எந்த ஒரு தலைவரையும் போலவே ஜெயலலிதாவும் சவால்களால் சூழப்பட்டவர்தான். ஆனால் அத்தனை சவால்களையும் ஜஸ்ட் லைக் தட் தகர்த்தெறிந்து தொடர்ந்து முன்னேறி வெற்றியை தனதாக்கிக் கொண்ட வித்தியாசத் தலைவர் ஜெயலலிதா என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. அரசியல் மாச்சரியங்களைக் கடந்து ஜெயலலிதாவை அனைவருக்கும் பிடிக்கக் காரணம் அந்த தைரியமும் தன்னம்பிக்கையும்தான். 1948ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி மாண்டியா மாவட்டத்தில் ஜெயராம் - வேதவள்ளி தம்பதிக்கு மகளாகப் பிறந்தவர் ஜெயலலிதா. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தனது பூர்வீக ஊர் என்று அடிக்கடி கூறுவார் ஜெயலலிதா. இவரது தாத்தாவின் குடும்பம், ஸ்ரீரங்கத்தில் இருந்து மேல்கோட்டைக்கு இடம் பெயர்ந்த குடும்பம் என்றும் கூறுகின்றனர். தந்தை ஜெயராமின் மறைவிற்குப் பின்னர் பெங்களூருவிற்கு இடம் மாறிய ஜெயலலிதாவின் குடும்பம், அவரது தாயாருக்கு கிடைத்த திரைப்பட வாய்ப்புகளால் சென்னையின் குடியேறியது. வேதவல்லியாக இருந்த ஜெயலலிதாவின் தாயார் சினிமாவில் நடிப்பதற்காக சந்தியாவாக மாறினார். சென்னைக்கு வந்த பின்னர், சர்ச் பார்க் ப்ரேசெண்டேஷன் கான்வென்ட்டில் படித்த ஜெயலலிதா மெட்ரிக் தேறினார். ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் புகுமுக வகுப்பில் படிக்க அனுமதி கிடைத்த நேரத்தில்தான் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனவே படிப்பை கைவிட்டு நடிகையானார்.


தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தி
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் நடிகைகளின் அதிக பட்ச ஆசை, நிறைய திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க வேண்டும், பிரபல நாயகர்களின் ஜோடியாக நடித்து புகழ் பெற வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். ஆனால் பதினைந்து வயதில் திரை நட்சத்திரமாகத் தனது வாழ்வைத் துவங்கிய ஜெயலலிதா ஒருவர் மட்டுமே தமிழக வாழ்வில் ஒரு பெண் ஆளுமையாக திகழ்கிறார்.

எம்ஜிஆர் என்ற சக்தி 
1965ம் ஆண்டு வெண்ணிற ஆடை படத்தில் நடித்த போதோ புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த ஜெயலலிதாவை தனது ஆயிரத்தில் ஒருவன் படத்தின் நாயகியாக நடிக்க வைத்தார். அப்போதே ஜெயலலிதாவின் பக்கம் அதிர்ஷ்ட காற்று வீச ஆரம்பித்து விட்டது என்றுதான் கூற வேண்டும். எம்.ஜி.ஆருடன் மட்டும் ஜெயலலிதா இருபத்தி எட்டு படங்களுக்கும் மேலாகக் கதாநாயகியாக நடித்தார்.


 அரசியல் வாழ்க்கை
1981ம் ஆண்டு மதுரையில் ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் காவிரி தந்த கலைசெல்வி என்னும் நாட்டிய நாடகம் நடைபெறுவதாக இருந்தது. அந்த நாடகத்தில் நடிப்பதற்காக சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த ஜெயலலிதாவை அழைத்து வந்தார் ஆர்.எம்.வீரப்பன். அந்த வகையில் ஜெயாவின் அரசியல் பிரவேஷத்திற்கு வித்திட்டவர் ஆர்.எம்.வீரப்பன் என்றுதான் கூறவேண்டும்.
பிரச்சார பீரங்கி 
அதிமுகவில் இணைந்து பிரச்சார பீரங்கியாக உருவெடுத்தார். அவரது வருகை, பல அதிமுக புள்ளிகளுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது, எரிச்சலைக் கொடுத்தது. அவரை அடக்க முடியாமல் தவித்தனர். ஆனால் இந்த. எதிர்ப்புகளை தன்னை மேலும் பலப்படுத்திக் கொள்ளவும், நிரூபிக்கவும் ஜெயலலிதா பயன்படுத்திக் கொண்டார். அதிமுகவில் எம்.ஜி.ஆருக்கு அடுத்து தனி ஆதரவு வட்டம் ஒருவருக்கு அப்போதே இருந்தது என்றால் அது ஜெயலலிதாவுக்குத்தான்.
கொள்கை பரப்பு செயலாளர் 
1983ம் ஆண்டு அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார் ஜெயலலிதா. கட்சியில் ஏற்பட்ட புகைச்சலில் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து எம்.ஜி.ஆரால் விடுவிக்கப்பட்டார். 1984 சட்டசபைத் தேர்தலின்போது எம்.ஜிஆருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அமெரிக்க சென்றதால், ஜெயலலிதா,கிராமம் கிராமமாக பிரச்சாரம் செய்து அதிமுகவுக்கு ஆதரவு திரட்டினார் . அவரது பிரச்சாரத்திற்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதிமுகவும் அமோக வெற்றி பெற்றது.

அரசியல் வாரிசு 
1985 பிப்ரவரி 12ம் தேதி எம்.ஜி.ஆர் சென்னை திரும்பினார். ஜெயலலிதாவை மீண்டும் கொள்கை பரப்புச் செயலாளராக நியமித்தார் எம்.ஜி.ஆர். ஆக்கினார். 1986ம் ஆண்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற அனைத்துலக எம்.ஜி.ஆர். ரசிகர் மன்ற மாநாட்டில் வெள்ளி செங்கோலை எம்.ஜி.ஆருக்கு வழங்கி "அரசியல் வாரிசு"தானே என்பதை அடையாளப்படுத்திக் கொண்டார். ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்த புகைப்படம் அதுதான்.
எம்.ஜி.ஆர் மரணம் 
உடல்நிலையில் ஏற்பட்ட கோளாறினால் 1987 டிசம்பர் 24ம் தேதி எம்.ஜி.ஆர் மரணம் அடைந்தார். எம்.ஜி.ஆரின் உடலருகே இருந்த கண்ணீரோடு இருந்த ஜெயலலிதா எல்லோராலும் கவனிக்கப்பட்டார். எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வல வேனில் ஏறியபோது கே.பி.ராமலிங்கத்தால் வலுக்கட்டாயமாக இழுத்து கீழே தள்ளப்பட்ட சம்பவமும் அப்போது நடந்தது. அதனால் அனுதாபமும் பெற்றார். பிளவுபட்ட கட்சி எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின், அஇரண்டாகப் பிரிந்தது. அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழ, அ.தி.மு.க.வில் பதவிச் சண்டை உருவானது ஜெயலலிதா கோஷ்டி, ஆர்.எம்.வீ. கோஷ்டி என்று கட்சி 2 ஆக பிளவு பட்டது. முடிவில் எம்.ஜி.ஆரின் துணைவியார் ஜானகி அம்மாள் முதல்வர் பொறுப்பு ஏற்றார்
எதிர்கட்சித்தலைவி 
1989ம் ஆண்டு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயலலிதா, அதிரடியாக செயல்பட ஆரம்பித்தார். தமிழக சட்டசபையின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாதான். 27 எம்.எல்.ஏக்களை வைத்துக் கொண்டு திமுகவின் கண்களில் விரலை விட்டு ஆட்டினார். சட்டசபையில் எப்போதும் புயல்தான். 1989ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி சட்டசபையில் நடந்த வரலாறு காணாத வன்முறைச் சம்பவம் சட்டசபையின் வரலாற்றில் மிகப் பெரிய களங்கமாக அமைந்து போனது. தான் திமுகவினரால் தாக்கப்பட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் ஜெயலலிதா. கலைந்த தலையும், கிழிந்த சேலையுமாக அவர் வெளியே வந்து பேட்டி கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


முதல்வரான ஜெயலலிதா 1991ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்தித்தார் ஜெயலலிதா. தேரத்ல் பிரச்சாரத்தின்போது ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். அதனால் ஏற்பட்ட அனுதாப அலையால் அதிமுகவுக்குப் பெரும் வெற்றி கிடைத்தது. முதல் முறையாக முதல்வர் பதவியல் அமர்ந்தார் ஜெயலிதா.




சிறைவாழ்க்கை 
1991 முதல் 1996 வரை அவர் ஆட்சி புரிந்த விதம் தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஒன்று. அந்த காலகட்டத்தில்தான் அவர் மிகப் பெரிய அளவில் சொத்துக்குவிப்பில் ஈடுபட்டதாக பின்னாளில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்குதான் இவரை சிறைக்கும் அனுப்பி வைத்தது.

மீண்டு வந்த ஜெயலலிதா
1996ம் ஆண்டில் நடந்த தேர்தலில் ஆட்சியை பறிகொடுத்தார் ஜெயலலிதா. அதன் பின்னர் 2001ல் மீண்டும் ஆட்சியைப் பிடித்தார். அதை 2006ல் பறி கொடுத்தார். ஆனாலும் 2011ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை பெற்றது அதிமுக. மீண்டும் முதல்வரானார் ஜெயலலிதா. இந்த நிலையில்தான் 2014ம் ஆண்டு சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார் ஜெயலலிதா. தான் பிறந்த கர்நாடக மாநிலத்தில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டது அவரது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று. 2015ம் ஆண்டு சிறை தண்டனையிலிருந்தும், சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்தும் மீண்டு வந்தார் ஜெயலலிதா.

புதிய வரலாறு...
2016 சட்டசபைத் தேர்தலில் புதிய வரலாறு படைத்து வெற்றி பெற்றுள்ளது அதிமுக. 1984ம் ஆண்டுக்குப் பிறகு மாறி மாறி திமுக, அதிமுக ஆட்சியைப் பிடித்து வந்த நிலையில் முதல் முறையாக அதிமுக ஆட்சியை தக்க வைத்தது. எம்.ஜி.ஆரின் வாரிசு என்பதை இதிலும் நிரூபித்தார்.

மருத்துவமனையில் இதனிடையே செப்டம்பர் மாதம் 22ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா 75 நாட்களுக்குப் பின்னர் இன்று காலமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசியல் வரலாற்றில் ஜெயலலிதா தவிர்க்க முடியாத சக்தி என்பதில் சந்தேகமில்லை.


Tuesday, December 06, 2016

புரட்சித்தலைவரும் புரட்சித்தலைவியும் அதே இடத்தில்!!!

புரட்சித்தலைவரும் புரட்சித்தலைவியும் அதே இடத்தில்!!!



Sunday, November 27, 2016

வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி...5 நாட்கள் சிறப்பு முகாம்



ஜன்தன் வங்கிக் கணக்குகளுக்கான ரூபே கார்‌டுகளை விநியோகிக்க சென்னையில் அனைத்து வங்கிக் கிளைகளிலும் நாளை முதல் 5 நாட்களுக்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
கடந்த, 2014 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பிரதமரின், ‘ஜன் தன் யோஜனா’ என்னும், ‘வீட்டுக்கு ஒரு வங்கி கணக்கு’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்பட்டு வருகிறது. ஜன்தன் வங்கிக் கணக்குகளுக்கான ரூபே கார்‌டுகளை விநியோகிக்க சென்னையில் அனைத்து வங்கிக் கிளைகளிலும் நாளை முதல் 5 நாட்களுக்கு அதாவது டிசம்பர் 2-ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதில், வாடிக்கையாள‌ர்கள் ஆதார் அட்டை எண் மற்றும் கைபேசி எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்துக்கொள்ளவும் விண்ணப்பம் அளிக்கலாம். மேலும், தொழிலாளர்கள் புதிய ஜ‌ன்தன் சேமிப்பு கணக்குகளை தொடங்குவதற்கான விண்ணப்பங்களை வழங்கவும் சிறப்பு முகாமில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ‌

Courtesy: http://tv.puthiyathalaimurai.com/detailpage/news/tamilnadu/112/68471/aadhar-card-connect-with-bank-accounts-five-days-special-camp

மின்னணு பணப் பரிவர்த்தனைக்கு மாற பிரதமர் மோடி வேண்டுகோள்

மின்னணு பணப்பரிமாற்ற வசதியை பயன்படுத்த ஒவ்வொரு இந்தியரும் உறுதி எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுகிழமையன்று மன் கி பாத் என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ரேடியோ மூலமாக நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று நடைபெற்ற மன் கீ பாத் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர், மின்னணு பணப்பரிமாற்ற வசதியை பயன்படுத்த ஒவ்வொரு இந்தியரும் உறுதி எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற சிலர் ஏழைகளைப் பயன்படுத்துவதாக கூறியுள்ள மோடி அவர்கள் வாழ்க்கையில் விளையாட வேண்டாம் என்றும் கே‌ட்டுக்கொண்டார். ஏழை மக்களும் தற்போது ரூபே ஏடிஎம் அட்டைகளை பயன்படுத்தத் தொடங்கியிருப்பதாகவும் அதன் பயன்பாடு‌ 3 மடங்கு அதிகரித்திருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
ஏழைகள், விவசாயிகள், நலிவடைந்தவர்கள் நலன் கருதியே 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாததாக்கும் முடிவை எடுத்ததாகவும் பிரதமர் தெரிவித்தார். இவ்விவகாரத்தில் மக்களின் சிரமங்களை ‌உணர்ந்திருப்பதாகவும் ஆனால் கறுப்புப் பணம் என்ற வியாதி கடந்த 70 ஆண்டுகளாக நாட்டை பீடித்‌திருப்பதாகவும் அதை குணப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல என்றும் பிரதமர் குறிப்பிட்டார். ரூபாய் பிரச்னைகள் சரியாக 50 நாட்களாகும் என தான் ஏற்கனவே கூறியிருந்ததாகவும் பிரதமர் தெளிவுபடுத்தினார்.
சிறு வியாபாரிகள் மின்னணு முறை பணப் பரிமாற்றத்துக்கு மாற இதுவே சரியான நேரம் என்றும் இது நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் பிரதமர் பேசினார். தொழிலாளர்கள் அனைவரும் வங்கிக் கணக்கைத் தொடங்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், இதன் மூலம் தொழிலாளர்கள் அவர்களுக்குரிய ஊதியத்தை பெற முடியும் என்றும் தெரிவித்தார்.
Courtesy: 

Tuesday, November 22, 2016

அருங்காட்சியகங்கள் துறை வெளியிடும் புத்தகங்கள் இணையதளத்தில் படிக்க வசதியாக இ-புக்ஸாக மாற்றம் இலவசமாக பதிவிறக்கம் செய்ய...

இந்தியாவின் இரண்டாவது பழமையான அருங்காட்சியகமான சென்னை அரசு அருங்காட்சியகம், கி.பி. 1851 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. கி.பி.1882 முதல், தொல்லியல், மானிடவியல், ஓவியம் மற்றும் சிற்பக்கலை, தாவரவியல், புவியியல், அருங்காட்சியகவியல், நாணயவியல், விலங்கியல், தொல்பொருட்கள் பாதுகாப்பு முதலிய துறைகளில் பல்வேறு புத்தகங்களையும் இதர பிரசுரங்களையும், அருங்காட்சியகங்கள் துறை வெளியிட்டுவருகிறது. அருங்காட்சியகங்கள் துறையின் வெளியீடுகள் உலகப்புகழ் பெற்றவையாகும். அருங்காட்சியக சேகரிப்புகளின் சுட்டுப்பொருட்கள் பற்றிய குறிப்பிடத்தக்க ஆராய்ச்சிகளின் விளைவாக அப்பதிப்புகள் இருப்பதால், அவை இவ்வுலகிற்கே சான்றாதார நூல்களாக உள்ளன.
இதுவரை, 183 புத்தகங்கள் (24000 பக்கங்கள்) இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும் பல புத்தகங்களை பதிவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அப்புத்தகங்களை, தேடக்கூடிய பி.டி.எஃப் வடிவில், வாசகர்கள் எளிதாக அணுகி, படித்திட, இந்த வலைதளம் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
வலைதள முகவரி: 

செல்லாத நோட்டு அறிவிப்பு... குவியும் பான் கார்டு விண்ணப்பங்கள்

மத்திய அரசின் அடுத்தடுத்த அதிரடிகளால் பான் கார்டு எனப்படும் நிரந்தர கணக்கு எண்ணுக்கு விண்ணப்பம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
வங்கிகளில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பண பரிவர்த்தனை செய்பவர்கள் மற்றும் தங்க நகை வாங்குவோர் கட்டாயம் பான் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவையடுத்து பான் கார்டு பெற மனு செய்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். மத்திய அரசின் நிறுவனங்களான யுடிஐ (UTI), என்எஸ்டிஎல் (NSDL) ஆகிய நிறுவனங்களில் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான மனுக்கள் குவிந்து வருவதாக சென்னையில் உள்ள யுடிஐயின் தென் மண்டல அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.Pan card
பான் கர்டு பெற என்ன தகுதி வேண்டும்?:
பான் கார்டு பெற எந்த கல்வித் தகுதியும் தேவையில்லை அதே போல் பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை எடுக்கலாம் எனவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். அதே போல் தற்போது வரை நாட்டில் 25 கோடி பேரிடம் பான் கார்டு இருப்பதாகவும், அடுத்தாண்டுக்குள் இந்த எண்ணிக்கை மேலும் உயரும் எனவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
பான் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?:
பான் கார்டை, வருமான வரித்துறையின் இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் மூலம் மற்றும் மத்திய அரசு நிறுவனங்கள் மூலம் இருப்பிட மற்றும் புகைப்பட ஆவணங்களை கொடுத்து எளிதில் பெற்றுக்கொள்ளலாம். அதே போல் தனி நபருக்கு புதிய கார்டு பெற ரூ.107 மட்டுமே கட்டணம் என்றும், அதிக கட்டணத்தை முகவர்களிடம் கொடுத்து ஏமாற வேண்டாம் எனவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
பான்கார்டு வாங்கினாலே வருமானவரி கட்டவேண்டும் என்ற தவறான புரிதல் மக்களிடம் இருப்பதாகவும், இதற்கு அவசியமில்லை என்றும் வருமானவரித்துறை விளக்கமளித்துள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க, நீக்க மற்றும் திருத்தங்கள் செய்ய நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
Election-commission-28116 fb
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெயர்களை சேர்க்க, நீக்கம் மற்றும் திருத்தங்கள் செய்ய வரும் 30ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 11 மற்றும் 25 ஆகிய தேதிகளில் விண்ணப்பங்களை பெறுவதற்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வைத்திருப்பதால் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க இயலாது என்றும் , குடியிருக்கும் பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Link:

Friday, November 18, 2016

மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்- நூல்கள் பார்வையிட, பதிவிறக்க...

மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்


இது ஒரு உலகளாவிய தமிழர்கள் இணையம்வழி ஒன்றுகூடி தமிழ் இலக்கியங்களின் மின்பதிப்புக்களை உருவாக்கி அவற்றை இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களும் தமிழார்வலர்களும் இலவசமாக பெற வசதிசெய்யும் திட்டம்.
எந்த ஒரு சமூகத்திற்கும் இலக்கியங்கள்தான் அக்கலாசாரத்திற்கான ஒரு முக்கிய எடுத்துக்காட்டு. அதை செவ்வனே காத்து உலகளாவிய தமிழர்களுக்கும் ஏனையோருக்கும் பகிர்ந்துகொள்வதும் வரும் சந்ததியினருக்கு கொண்டு செல்வதும் ஒவ்வொரு தமிழரின் கடமை. மதுரைத் திட்டம் இதற்கான ஒரு கூட்டு முயற்சி.
மதுரைத் திட்டம் எந்தவித அரசாங்க (அ) தனியார் நிறுவன உதவியின்றி, எந்தவித வியாபார நோக்கமுமின்றி நடைபெறுகின்ற ஒரு தன்னார்வ (voluntary) முயற்சி. 1998-ம் ஆண்டு தமிழர் திருநாள் (பொங்கல்) அன்று ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் இன்றும் தொடர்ந்து இயன்று வருகின்றது. உலகில் வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் முன்னூற்றுக்கு மேற்பட்ட தமிழர்களும் தமிழார்வலர்களும் ஒன்றுகூடி இத்திட்டத்தை நடத்தி வருகின்றனர்.
மதுரைத் திட்டம் உலகில் பல நாடுகளில் வசித்து வரும் தமிழர்கள் அவரவர் தங்களது வீடுகளில் தனியார் கணினி கொண்டு கிடைக்கும் நேரங்களில் தமிழ் இலக்கியங்களை கணினியில் உள்ளிட்டு (அ) பிழை திருத்தி மின்பதிப்புகளாக தயாரிக்கும் ஒரு கூட்டு முயற்சி. தமிழ் இலக்கியங்களை மின்வழி பாதுகாத்து மற்றவர்களுடன் இலவசமாக பகிழ்ந்து கொள்வதில் விருப்புள்ள அனைவரும் இத்திட்டதில் பங்கு பெறலாம்.
மதுரைத் திட்டத்தின் மின்பதிப்புகள் ஆரம்ப காலத்தில் இணைமதி, மயிலை தமிழ் எழுத்திருக்கள் (fonts) கொண்டு தயாரிக்கப்பட்டது. ஆனால் 1999-ம் ஆண்டிலிருந்து இணையம் வழி தமிழ் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான என இணையம்வழி நிர்மானிக்கப்பட்ட தமிழ் தகுதர (TSCII - Tamil Script Code for Information Interchange) வடிவம் கொண்டு தயாரித்து மின்பதிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றது. மின்பதிப்புகள் இணையத்தில் இணைய பக்கங்களாகவும் (webpages in html format), PDF வடிவத்திலும் வினியோகிக்கப்பட்டு வருகிறது. 2003-ம் ஆண்டிலிருந்து பல்மொழி ஒருங்குக் குறியீடு (Unicode) முறை தயாரிக்கப்பட்ட மின்பதிப்புகளையும் வெளியிட்டு வருகிறோம்.
தமிழ் இலக்கியக்களின் சரித்திம் மிக பழமையானது. முதற் சங்க கால நூல்கள்இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இயற்றப்பட்டது என்பது வல்லுனர்கள் கருத்து. மதுரைத் திட்டம் காலம், சமயம், தேசப்பிரிவு, இலக்கியப்பிரிவு போன்ற எவ்வித பாகுபாடுமின்றி எல்லாவிதமான தமிழ் நூல்களின் மின்பதிப்புக்களை வெளியிட்டு வருகின்றது. தொன்றுதொட்ட சங்க கால நூல்கள்முதல் தற்கால தமிழ்நூல்கள் வரை அனைத்தும் வெளியிடப்படுகிறது. ஒரேஒரு கட்டுப்பாடு புத்தக வடிவில் வெளியான நூல்களுக்கான காப்புரிமைகளுக்கு மரியாதை கொடுத்து கண்ணியமாக நடப்பது. காப்புரிமை இல்லா எல்லா நூல்களையும் மின்பதிப்பில் வெளியிடலாம். காப்புரிமை உள்ள கடந்த நூற்றாண்டு, தற்கால நூல்களுக்கு காப்புரிமை கொண்டோரின் அனுமதி தேவை.
மதுரைத் திட்டத்தைப் பற்றி மற்ற விவரங்களையும் தமிழ் நூல்களின் மின்பதிப்புக்களையும் இந்த இணைய தளத்தின் பக்கங்கள் மூலமாக இலவசமாக பெறலாம். மதுரைத் திட்ட இணைய தளத்திற்கு வருகை தந்ததற்கு எங்களது மனமார்ந்த நன்றி. தங்களது வருகை தொடர்ந்து நீடிக்கும் என்று கருதுகிறோம். மதுரைத் திட்டத்தில் பங்கு கொள்ள விரும்புவோர் மின்னஞ்சல் மூலமாக மதுரைத் திட்ட தலைவருடன் kalyan AT geocities.com & kumar AT vt.edu தொடர்பு கொள்ளவும்.
வலைதள முகவரி:
 நன்றி: http://www.projectmadurai.org/index.utf8.html

Friday, November 04, 2016

Wednesday, September 14, 2016

பாராலிம்பிக்: ஈட்டி எறிதலில் இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியாவுக்கு தங்கம்

ரியோ டி ஜெனிரோ: ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியா உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.பிரேசிலி்ல் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பில் தேவேந்திர ஜஜாரியா கலந்து கொண்டார். இதில் அவர் தங்கப்பதக்கம் வென்றார். எப் 46 பிரிவில் தேவேந்திர ஜஜாரியா 63.97 மீட்டர் தூரம் எறிந்து சாதனை படைத்துள்ளார்.இதன் மூலம் பாராலிம்பிக் போட்டியில் இந்தியா இரண்டாவதுதங்கம் பெற்றுள்ளது. ஏற்கனவே பாராலிம்பிக் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் உயரம் தாண்டுல் பிரிவில் தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.2004 பாராலிம்பிக்கில் 62.15மீ., தூாரம் எறிந்து தங்கம் வென்ற தேவேந்திர ஜஜாரியா, ரியோவில் நடைபெறும் பாராலிம்பிக்கில் 63.97 மீ., தூரம் வீசி தனது உலக சாதனையை முறியடித்துள்ளார். இதன்மூலம் பாராலிம்பிக் போட்டிகளில் 2 தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியா 

விண்ணப்பித்த 4 நாட்களில் பாஸ்போர்ட் கிடைக்கும் புதிய திட்டம் அதிகாரி தகவல்.

விண்ணப்பித்த 4 நாட்களில் பாஸ்போர்ட் கிடைக்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரி தெரிவித்தார். சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரியாக இருந்த கே.பாலமுருகன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்த 4 நாட்களிலேயே பாஸ்போர்ட் கிடைக்கும் புதிய திட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பவர்கள் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பான் கார்டு ஆகிய மூன்று ஆவணங்களுடன் நோட்டரி பப்ளிக்கின் கையெழுத்துடன் உள்ள படிவத்தை இணைத்திருந்தால் நான்கு நாட்களில் பாஸ்போர்ட் கிடைக்கும். பாஸ்போர்ட் கிடைக்கப்பெற்றவுடன் காவல்துறையின் சான்றாய்வு மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் சென்னை மண்டலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. தட்கல் எனப்படும் துரித பாஸ்போர்ட் திட்டத்தில் இருந்து இது முற்றிலும் மாறானது. மொபைல் போலீஸ் ஆப் பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பிப்பவர்களுக்கு விரைவாக காவல்துறை சான்றாய்வு பெற ஏதுவாக மொபைல் போலீஸ் ஆப் என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டால் தினமும் பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பித்தோர் பற்றிய விவரம் அனைத்தும் அந்தந்த போலீஸ் நிலையத்திற்கு உடனடியாக தெரியும். எனவே அவர்களிடம் போலீஸ் அதிகாரிகள் இப்போது நடைமுறையில் உள்ளதை விட விரைவாக விசாரணை நடத்துவார்கள். இந்த திட்டம் இந்தியாவில் மூன்று மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இப்போது தமிழகத்தில் அறிமுகம் செய்ய மாநில அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த ஒப்புதலை வழங்கிய தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தலைமை செயலர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். சென்னை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் 230 போலீஸ் நிலையங்களில் இந்த வசதி ஏற்படுத்தப்படும். இ-சேவை மையங்கள் தமிழ்நாட்டில் உள்ள 280 இ-சேவை மையங்களில் இணைய வழி பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வசதி அமல்படுத்தப்பட்டு இருக்கிறது கிராமப்புறங்களில் வாழும் மக்கள் எளிதில் பாஸ்போர்ட் பெறுவதற்கு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பொதுமக்கள் 155 ரூபாய் செலுத்த வேண்டும். கடந்த ஆண்டு சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் மூலம் 4 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரை மூன்று லட்சத்து மூன்றாயிரம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டு உள்ளது. விண்ணப்பங்களை சரிபார்ப்பதற்கான கால அளவு 19 நாட்களில் இருந்து 2 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் அளித்த மறுநாளே விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிப்பார்ப்பதற்கு அழைக்கப்படுவார்கள். இவ்வாறு கே.பாலமுருகன் தெரிவித்தார். பேட்டியின்போது புதிய பாஸ்போர்ட் அதிகாரி பி.கே.அஷோக் பாபு, பத்திரிகை தகவல் மைய கூடுதல் டைரக்டர் ஜெனரல் கே.முத்துக்குமார் ஆகியோர் அருகில் இருந்தனர்.
Courtesy: Kalvisolai

Monday, September 05, 2016

HAPPY TEACHERS WISHES...

ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்










Sunday, September 04, 2016

ANNAMALAI UNIVERSITY DDE RESULT-MAY 2016-PUBLISHED.

Results Published on 02-09-2016

  • 003 B.A. HISTORY
  • 004 B.A. SOCIOLOGY
  • 006 B.A. ECONOMICS
  • 008 B.LIT - TAMIL
  • 009 B.COM.
  • 011 B.B.A.
  • 018 M.SC. MATHEMATICS
  • 019 M.SC. PHYSICS
  • 020 M.SC. CHEMISTRY
  • 021 M.SC. ZOOLOGY
  • 022 M.SC. BOTANY
  • 024 BACHELOR OF ACADEMIC LAWS
  • 025 BACHELOR OF GENERAL LAW
  • 055 BACHELOR OF LIBRARY AND INFORMATION SCIENCE
  • 056 MASTER OF LIBRARY AND INFORMATION SCIENCE
  • 067 B.A. TAMIL
  • 121 B.SC. APPLIED CHEMISTRY
  • 122 B.SC. ELECTRONIC SCIENCE
  • 125 BACHELOR OF MARKETING MANAGEMENT
  • 130 M.A. LINGUISTICS
  • 134 P.G. DIPLOMA IN AGRICULTURAL MARKETING MANAGEMENT
  • 141 B.COM. COMPUTER APPLICATIONS
  • 142 B.SC. MATHEMATICS WITH COMPUTER APPLICATIONS
  • 158 M.SC. ELECTRONIC SCIENCE
  • 167 B.SC. PHYSICS
  • 180 B.A. PUBLIC ADMINISTRATION
  • 183 B.COM INTERNATIONAL BUSINESS
  • 184 B.COM. ACCOUNTING AND FINANCE
  • 185 BACHELOR OF BUSINESS LAW
  • 201 STIT - LINUX
  • 202 STIT - VISUAL BASIC
  • 203 STIT - C
  • 204 STIT - C++
  • 205 STIT - ASP
  • 206 STIT - ADMINISTRATIVE TOOLS
  • 207 STIT - UNIX
  • 208 STIT - DEVELOPER 2000
  • 209 STIT - WINDOWS NT
  • 250 B.B.A.
  • 260 B.B.A. APPLIED MANAGEMENT
  • 264 B.COM FINANCE & INVESTMENT
  • 265 B.B.A. FINANCIAL PLANNING
  • 288 P.G. DIPLOMA IN INTELLECTUAL PROPERTY RIGHTS
  • 290 P.G. DIPLOMA IN LIBRARY AUTOMATION AND NETWORKING
  • 338 B.B.A. AVIATION, TOURISM & HOSPITALITY MANAGEMENT
  • 384 P.G. DIPLOMA IN ENGLISH LANGUAGE TEACHING
  • 412 BACHELOR OF FILM & TELEVISION TECHNOLOGY (DIRECTION)
  • 416 B.SC. MEDIA GRAPHICS & ANIMATION
  • 464 B.B.A. HOSPITALITY AND TOURISM MANAGEMENT
  • 465 B.B.A. BUSINESS LEADERSHIP
  • 480 B.A. SOCIAL WORK
  • 484 B.COM. BUSINESS STUDIES
  • 485 B.COM. MARKETING MANAGEMENT
  • 486 B.A. HISTORY AND HERITAGE MANAGEMENT
  • 498 B.SC. DIGITAL MEDIA
  • 521 P.G. DIPLOMA IN PUBLIC ADMINISTRATION
  • 522 P.G. DIPLOMA IN HUMAN RIGHTS
  • 523 B.SC. ENTERPRISE NETWORK & SECURITY MANAGEMENT
  • 525 B.SC. DIGITAL PUBLISHING
  • 603 B.A. HISTORY (LATERAL-II)
  • 609 BACHELOR OF COMMERCE (LATERAL-II)
  • 611 BACHELOR OF BUSINESS ADMINISTRATION (LATERAL-II)
  • 618 M.SC. MATHEMATICS (LATERAL-II)
  • 620 M.SC. CHEMISTRY (LATERAL-II)
  • 622 M.SC. BOTANY (LATERAL-II)
  • 624 B.COM. ACCOUNTING AND FINANCE (LATERAL-II)
  • 633 B.A. HISTORY (DOUBLE DEGREE)
  • 639 BACHELOR OF COMMERCE (DOUBLE DEGREE)
  • 642 B.LIT. (DOUBLE DEGREE)
  • 667 B.SC. PHYSICS (LATERAL-II)
  • 670 B.SC. VISUAL MEDIA
  • 693 P.G. DIPLOMA IN ADULT AND CONTINUING EDUCATION
  • 702 B.SC. APPLIED CHEMISTRY (LATERAL-III)
  • 703 B.A. HISTORY (LATERAL-III)
  • 705 B.B.A. ONLINE
  • 709 BACHELOR OF COMMERCE (LATERAL-III)
  • 711 BACHELOR OF BUSINESS ADMINISTRATION (LATERAL-III)
  • 717 B.SC. PHYSICS (LATERAL-III)
  • 758 MASTER OF HEALTH SCIENCE IN REPRODUCTIVE AND SEXUAL MEDICINE
  • 760 MASTER OF HEALTH SCIENCE IN PUBLIC HEALTH
  • 789 B.SC. CHEMISTRY - LATERAL-III
  • 790 B.SC. CHEMISTRY
  • 791 B.SC. CHEMISTRY - LATERAL-II
  • 800 B.SC. MICROBIOLOGY
  • 801 B.MUSIC - VOCAL
  • 802 B.MUSIC - VEENA
  • 803 B.MUSIC - VIOLIN
  • 805 B.MUSIC - MRIDANGAM
  • 806 B.DANCE
  • 820 B.A. ASTROLOGY
  • 822 MASTER OF DANCE
  • 826 MASTER OF MUSIC - VOCAL
  • 828 MASTER OF MUSIC - VIOLIN
  • 831 MASTER IN BHARATHANATTIYAM
  • 860 MASTER OF HEALTH SCIENCE IN PUBLIC HEALTH (LATERAL-II)
  • 943 B.SC. SYSTEM & NETWORK ADMINISTRATION
  • 966 M.Sc. FASHION DESIGN
  • 967 M.Sc. INTERIOR DESIGN
  • 969 B.Sc. FIRE AND SAFETY
  • Results Published on 31-08-2016
  • 010 B.SC. MATHEMATICS
  • 033 P.G. DIPLOMA IN MATERIALS MANAGEMENT
  • 034 P.G. DIPLOMA IN BUSINESS ADMINISTRATION
  • 035 P.G. DIPLOMA IN PERSONNEL MANAGEMENT & INDUSTRIAL RELATIONS
  • 036 P.G. DIPLOMA IN MARKETING MANAGEMENT
  • 037 P.G. DIPLOMA IN FINANCIAL MANAGEMENT
  • 038 P.G. DIPLOMA IN TOURISM MANAGEMENT
  • 039 P.G. DIPLOMA IN ADVERTISING
  • 040 P.G. DIPLOMA IN PUBLIC RELATIONS
  • 052 CERTIFICATE PROGRAMME IN AUTOMOBILE TECHNOLOGY
  • 053 CERTIFICATE PROGRAMME IN OFFSET MACHINE PRINTING
  • 054 CERTIFICATE COURSE IN BINDING AND FINISHING
  • 069 P.G. DIPLOMA IN GUIDANCE AND COUNSELLING
  • 072 P.G. DIPLOMA IN DESIGN AND CONSTRUCTION OF CONCRETE STRUCTURES
  • 074 P.G. DIPLOMA IN APPLIED OPERATIONS RESEARCH
  • 118 M.A. PUBLIC ADMINISTRATION
  • 132 P.G. DIPLOMA IN SOCIOLOGY OF HEALTH
  • 135 P.G. DIPLOMA IN HOSPITAL MANAGEMENT
  • 136 P.G. DIPLOMA IN COMPUTER APPLICATIONS
  • 140 B.A. POPULATION STUDIES
  • 148 B.A. POLITICAL SCIENCE
  • 159 M.A. POLITICAL SCIENCE
  • 181 B.A. BUSINESS ECONOMICS
  • 188 M.A. INTERNATIONAL RELATIONS
  • 189 M.A. POLICE ADMINISTRATION
  • 196 P.G. DIPLOMA IN SOFTWARE BASED STATISTICAL ANALYSIS
  • 197 P.G. DIPLOMA IN ACTUARIAL STATISTICS
  • 198 P.G. DIPLOMA IN ENTREPRENEURSHIP
  • 223 P.G. DIPLOMA IN INTERNET TECHNOLOGY
  • 224 P.G. DIPLOMA IN DATA MINING
  • 226 P.G. DIPLOMA IN CYBER SECURITY
  • 291 P.G. DIPLOMA IN SOFTWARE MARKETING
  • 382 P.G. DIPLOMA IN PLANT PROTECTION
  • 385 P.G. DIPLOMA IN FOREIGN TRADE
  • 386 P.G. DIPLOMA IN N.G.O. MANAGEMENT
  • 390 P.G. DIPLOMA IN NATURAL LANGUAGE PROCESSING
  • 394 P.G. DIPLOMA IN ELECTRICAL SAFETY AND SAFETY MANAGEMENT
  • 395 P.G. DIPLOMA IN ELECTRICAL ENERGY MANAGEMENT AND ENERGY AUDIT
  • 397 P.G. DIPLOMA IN QUANTITY SURVEYING AND VALUATION
  • 434 M.F.A. DIGITAL GRAPHIC TECHNOLOGY
  • 451 P.G. DIPLOMA IN BANKING & INSURANCE
  • 452 P.G. DIPLOMA IN FINANCE & TAXATION
  • 453 P.G. DIPLOMA IN ADVERTISING & SALESMANSHIP
  • 454 P.G. DIPLOMA IN INTERNATIONAL BUSINESS
  • 455 P.G. DIPLOMA IN HUMAN RESOURCE MANAGEMENT
  • 456 P.G. DIPLOMA IN RETAILING
  • 466 M.A. DEVELOPMENT ADMINISTRATION
  • 467 M.A. DISASTER MANAGEMENT
  • 469 M.A. SOCIAL WELFARE ADMINISTRATION
  • 471 M.A. HUMAN RIGHTS
  • 479 B.A. RURAL MANAGEMENT
  • 482 B.A. SOCIAL AND CIVIC STUDIES
  • 483 B.A. FUNCTIONAL TAMIL
  • 487 B.A. ENGLISH AND COMMUNICATION
  • 488 B.A. HUMAN RIGHTS
  • 489 B.A. SOCIAL WELFARE ADMINISTRATION
  • 610 B.SC. MATHEMATICS (LATERAL-II)
  • 635 B.A. POLITICAL SCIENCE (DOUBLE DEGREE)
  • 648 B.A. POLITICAL SCIENCE (LATERAL-II)
  • 678 CERTIFICATE PROGRAMME IN SAFETY IN CONSTRUCTION PRACTICES
  • 680 CERTIFICATE PROGRAMME IN PLUMBING (WATER SUPPLY AND SANITORY INSTALLATIONS)
  • 681 CERTIFICATE PROGRAMME IN FOOD AND NUTRITION
  • 710 B.SC. MATHEMATICS (LATERAL-III)
  • 792 M.SC. MICROBIOLOGY
  • 821 M.A. ASTROLOGY
  • 940 M.SC. VISUAL COMMUNICATION
  • 970 P.G. Diploma in Guidance and counselling
  • 986 M.Sc.COASTAL AQUACULTURE
  • Results Published on 11-08-2016
  • 048 P.G. DIPLOMA IN CO-OPERATIVE MANAGEMENT
  • 070 M.A. POPULATION STUDIES
  • 153 M.SC. BIOINFORMATICS
  • 186 M.A. HISTORY AND HERITAGE MANAGEMENT
  • 190 M.A. BUSINESS ECONOMICS
  • 191 M.A. ENVIRONMENTAL ECONOMICS
  • 192 M.A. TRANSLATION STUDIES
  • 259 M.A. RURAL MANAGEMENT
  • 263 M.A. PHILOSOPHY, RELIGION & CULTURE
  • 750 M.A. N.G.O. MANAGEMENT
  •