மருத்துவப் படிப்புக்கான நீட் பொதுநுழைவுத் தேர்வை தமிழிலும் எழுதலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மருத்துவப் படிப்புக்கான நீட் பொதுநுழைவுத் தேர்வை தமிழ், அசாமி, குஜராத்தி, தெலுங்கு, பெங்காலி ஆகிய மொழிகளிலும் எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.டெல்லியில் இதுகுறித்த அறிவிப்பை சுகாதாரத்துறை இணைஅமைச்சர் அனுப்ரியா படேல் தெரிவித்தாக தகவல் வெளியாகியுள்ளது.
12-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தாலும், மருத்துவம் பயில தனியாக நீட் எனும் பொதுநுழைவுத் தேர்வை மாணவர்கள் எழுத வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது கடும் சர்ச்சைகளை கிளப்பியது.
இந்நிலையில், நீட்(NEET) தேர்வை தமிழ் உட்பட பிராந்திய மொழிகளிலும் எழுதலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ், குஜராத்தி, அசாமி, தெலுங்கு, பெங்காலி, மராத்தி உட்பட மொழிகளில் நீட் பொதுநுழைவுத் தேர்வை எழுத முடியும். ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் தேர்வெழுதுவது நடைமுறையில் உள்ளது.
0 comments:
Post a Comment