#

#

#

#

#

#

#

#

#

#

Wednesday, December 26, 2018

1990ல் வாழ்ந்தவர்கள் அனுபவித்த வாழ்கையின் ஒரு தொகுப்பு...

1990ல் வாழ்ந்தவர்கள் அனுபவித்த வாழ்கையின் ஒரு தொகுப்பு...























1990 ம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் கட்டாயம் படிக்கவேண்டியவை சிரிப்போடு கண்ணீர் வரும்

📕1990 ம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் கட்டாயம் படிக்கவேண்டியவை சிரிப்போடு கண்ணீர் வரும்

1990 ம் ஆண்டிற்கு முன்னர் பிறந்தவர்களுக்கு மட்டும் இந்த அருமை புரியும்.

🏅1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது🏅

💠 காலை எழுந்ததும் பசும்பால் வாங்க அப்பா வரிசையில் நின்றிருந்தார்.

💠 வாங்கி வந்த தண்ணீர் கலக்காத பாலில், அம்மா டீ போட்டு கொண்டு வந்தார். குடும்பத்துடன் அமர்ந்து டீ குடிப்பதை கூட அவரவர் முகத்தை பார்த்து ரசித்து குடித்தோம்.

💠 ஆர்ப்பாட்டமே இல்லாமல் நாம் அனைவரும் தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு கூட நடந்தே சென்றோம்…

 💠ஆசிரியரின் மீது மரியாதையும் பயமும் இருந்ததே தவிர ஒரு நாளும் ஆசிரியரை தரக்குறைவாகவோ, இழிவாகவோ ஒரு மாணவனும் நினைத்ததில்லை…

 💠பள்ளி முடித்து வீட்டுக்கு வந்ததுமே, பையை தூக்கி போட்டுவிட்டு தெருவில் கும்பலாக விளையாடினோம்…

 💠விளையாட்டில் கூட ஆங்கிலம் கலக்காத தமிழ் நம் அனைவர் நாவிலும் வீரியமாக தொற்றியிருந்தது…

💠 மாலை 4 மணிக்கு மேல் நம் அக்கா தங்கைகளுக்கு அம்மா அழகாக சடை போட்டுவிட்டார்…

💠 உதிரியாக வாங்கிய பூக்களை (மல்லி மற்றும் பிச்சிப்பூ) வாழை நாறால் சிறுசிறுக கட்டி, அதை அக்கா தங்கைக்கு அம்மாவே தன் கையால் குத்தி அழகு பார்த்தார்…

 💠மாலையில் நம் தாத்தாவும் அப்பாவும் ஒன்றாக அமர்ந்து தூர்தர்ஷனில் செய்திகள் பார்த்தார்கள்…

💠 வெள்ளிக்கிழமையன்று, குறைந்தபட்சம் 10பேராவது ஒன்றாக அமர்ந்து இரவு ஒளியும் ஒலியும் பார்த்தோம்…

💠 அம்மாக்களுக்கு அன்று சீரியல் என்றாலே என்னவென்று பொருள் தெரியாமல், வீட்டு வாசலில் அமர்ந்து நம் விளையாடுவதை வேடிக்கை பார்த்தனர்…

💠 ஊர வைத்த அரிசியை ஆட்டுக்கல்லில் போட்டு அம்மா இட்லிக்கு மாவை அரைத்தார்…

💠 அதிகபட்ச அப்பாக்களுக்கு சிகரெட் மற்றும் குடிப்பழக்கம் இல்லாமல் இருந்தது…

💠 ஞாயிற்றுகிழமை மதியம், தூர்தர்ஷன் மாநில மொழி திரைப்படத்தில் தமிழ் படம் வராதா என ஏங்கி இருக்கிறோம்…

 💠ஞாயிறு மாலை டிவியில் திரைப்படம் பார்ப்பதால் தெருவில் ஈ காக்கைகள் கூட பார்க்க முடியாத சூழ்நிலை இருந்தது…

 💠ஞாயிறு பார்த்த படத்தை பற்றிய விவாதம் திங்களன்று பள்ளி நண்பர்களிடத்தில் தொடர்ந்துகொண்டே இருந்தது…

💠 உறவினர்கள் வீட்டிற்கு வந்தால் அவர்களுக்காக வாங்கிய குளிர்பானத்தில் நமக்கும் கொஞ்சம் தருவார்கள் என காத்து கொண்டிருந்தோம்…

 💠தீபாவளி ரம்ஜான் என பண்டிகை காலங்களில் புதுத்துணி எடுக்க குடும்பத்துன் ஒன்றாக சேர்ந்து போனோம்… அம்மா அப்பா வாங்கி கொடுத்த துணியை மட்டுமே அணிந்து அழகு பார்த்தோம்…

 💠ஒரு தெருவிற்கு இரண்டு பேர் காதலிப்பதே அபூர்வமாக இருந்தது… அன்றைய காதலர்கள் காதலில் தோற்றால் தற்கொலை செய்துகொண்டனர்…

💠 பண்டிகை காலம் வந்தால் வாழ்த்து அட்டை (க்ரிட்டிங் கார்டு) வாங்க கடைகளில் அலை மோதினோம்…

💠 10வது மற்றும் 12வது ரிசல்ட் பார்க்க தினத்தந்தி வாசலில் தவம் கிடந்தோம்…

💠 யாராவது செல்போன் (சாதாரண 1100) வைத்திருந்தால் அதை ஆச்சரியமாக வாங்கி தொட்டு பார்த்தோம்…

💠 நம் அக்காவும் தங்கையும் குதிரை வால் சடை போட்டு வீதிகளில் வலம் வந்தனர்…

 💠பணக்கார வீட்டு இளம் பெண்கள் BSA SLR சைக்கிள் வைத்திருந்தார்கள்…

 💠10ல் குறைந்தபட்ச 8 வீட்டில் உள்ள குழந்தைகளிடம் உண்டியல் பழக்கம் இருந்தது…

 💠போன கரண்ட் திரும்ப வந்ததும் கை தட்டி ஆரவாரப்படுத்தினோம்…

💠 வருடத்திற்கு ஒருமுறை குடும்பத்துடன் சினிமாவுக்கு போவதே பெரிய விஷயமாக இருந்தது…

💠 வீட்டில் யாருக்காவது திருமணம் நடந்தால், கிடைக்காத எதோ ஒரு அபூர்வ பொருள் கிடைத்தது போல் மிகுந்த மகிழ்ச்சிடன் காணப்பட்டோம்…

💠 ஊருக்கே ஒருவரோ இருவரோதான் வெளிநாட்டில் வேலை பார்ப்பவராக இருந்தார்…

💠 10ல் 8 கன்னிப் பெண்களின் தார்மீக ஆடை தாவணியாக இருந்தது…

💠 10ல் 8 ஆண்களிடத்தில் வேஷ்டி கட்டும் பழக்கம் இருந்தது…

💠 பள்ளி விடுமுறை காலத்தை வெளியூரில் உள்ள தாத்தா, மாமா, சித்தப்பா, பெரியப்பா வீட்டிற்கு சென்று விழா போல கொண்டாடினோம்…

💠 கிணற்றில் குளிக்கும் பழக்கம் இருந்தது…
பலருக்கு நீச்சல் தெரிந்திருந்தது…
அடிக்கடி காய்ச்சல், தலைவலி வந்தது கிடையாது…

💠 பலசரக்கு கடைகளுக்கு போகும்போது மஞ்சள் பைகளையே உபயோகித்தோம்…

💠 தரையில்தான் அதிகபட்சம் உறங்கினோம்… பாயை தவிர வேறொன்றை கண்டதில்லை…

💠 12 மணி நேரம் உழைத்தாலும் உடலில் வியர்வை நாற்றம் வந்தது கிடையாது…
 
💠 இவை அனைத்தையும் விட அப்பா அம்மா சொல்படி கேட்டு அனைவரும் நடந்தோம்…

 உலகிலுள்ள அத்துனை வசதிகளும் அருகிலேயே இருந்தால் கூட, இன்று இவற்றில் ஒன்று கூட சாத்தியமில்லை… பழைய பொக்கிஷங்கள் ஒன்று கூட கிடைக்கப் போவதில்லை… அன்றைய வாழ்நாள்தான் சொர்க்கம்…

அப்போலோ முதல் அமெரிக்கா வரை... ஒரு பிளேட் இட்லி என்ன விலை?

அப்போலோ முதல் அமெரிக்கா வரை... ஒரு பிளேட் இட்லி என்ன விலை? 
நன்றி : விகடன் 

இந்த பாஸ்வேர்ட் எல்லாம் வேண்டாம்: நிபுணர்கள் எச்சரிக்கை!!!


மொபைல் போன்கள், வங்கிக் கணக்குகள், மின்னஞ்சல் என எங்கும் எதிலும் பாஸ்வேர்டு மயமாகிவிட்ட நிலையில் பாஸ்வேர்டு எளிதில் மறக்கக்கூடாது என்பதற்காக சாதாரணமான வார்த்தைகள் அல்லது எண்களை பாஸ்வேர்டுகளாக வைத்துக் கொள்வது பாதுகாப்பின்மையை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 

குறிப்பாக 1,2,3,4,5,6 என்ற 6 இலக்க எண்கள் தான் மிக மோசமான பாஸ்வேர்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாஸ்வேர்டு தான் 2018ஆம் ஆண்டின் மிக மோசமான பாஸ்வேர்டுகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் Password  என்ற சொல் அதிகமாக உள்ளது. மின்னஞ்சல்கள், வங்கிக் கணக்குகள், மொபைல் போன்கள் உள்ளிட்டவற்றில் எளிதாக ஊடுருவ முடிந்த 5 லட்சம் பாஸ்வேர்டுகளை ஆராய்ந்ததில் சிறப்பு குறியீடுகளுடன் இயன்ற வரை நீளமானதாக உள்ள பாஸ்வேர்டே மிகவும் பாதுகாப்பானது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, December 25, 2018

உங்க வீட்டு மாடி காலியா இருக்கா? நீங்களும் ஆகலாம் 'மினி' விவசாயி!

ன்றைய சூழ்நிலையில் காய்கறிகளின் விலையைக் கேட்டாலே கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறோம். அந்த அளவிற்குக் காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. அதிக விலை கொடுத்து வாங்கும் காய்கறிகளும் இயற்கையான காய்கறிகளா... என்ற கேள்விக்கு நிச்சயமாக நம்மிடம் பதில் இருக்காது. இந்த விலை ஏற்றத்திற்கு விவசாயிகளை மட்டும் குறை சொல்லிவிட முடியாது. அப்படி இயற்கையான காய்கறிகளை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டுமெனில் உங்களுக்குச் சிறந்தது, மாடித்தோட்டம் மட்டும்தான்.


"உணவே மருந்து" என நமது முன்னோர்கள் வந்திருக்கிறார்கள். நாம் "மருந்தே உணவு" எனத் தொடர்ச்சியாக எடுத்துக் கொண்டு வருகிறோம். மாடித்தோட்டம் முழுமையாகத் தெரியாதவர்கள் கூட பத்து தொட்டிகள் வைத்து ஆரம்பிக்கலாம். முதலில் தொட்டிகளில் நிரப்பும் மண், உரம் போன்ற பொருட்களில் கவனம் செலுத்த வேண்டும். தேங்காய் நார் கட்டி, செம்மண், மாட்டு எரு, மண்புழு உரம், வேப்பம் புண்ணாக்கு என்ற கலவையை கலந்து தொட்டியில் போட வேண்டும். தொட்டியின் அடிப்புறம் நான்கு திசைகளிலும் அதிகப்படி நீர் வெளியேற துவாரங்கள் இட வேண்டும். அதன் பின்னர் 5 நாட்கள் கழித்து, விதையை விதைக்கலாம். ஆனால் கத்திரி, மிளகாய் மற்றும் தக்காளி பயிர்களை நாற்று விட்டு நடவு செய்வது அவசியம். மற்ற காய்கறிப் பயிர்களுக்கு நாற்றுவிடத் தேவையில்லை.

சென்னை பகுதிகளில் அதிகமானோர் பழ மர வகைகளைக் கூட மாடித்தோட்டத்தில் வளர்த்து வருகிறார்கள். பூச்சி தாக்குதலை தவிர்க்க வாரம் ஒரு முறை வேம்பு பூச்சிவிரட்டியை 2 மில்லி என்ற அளவில் 1 லிட்டர்  நீரில் கரைத்து மாலை வேளையில் செடிகளின் மேல் தெளிக்க வேண்டும். மேலும், இஞ்சி, பூண்டு, மிளகாய் மூன்றையும் தண்ணீரில் கலந்து தெளிக்கிறார்கள். சிலர் புளித்த மோரையும் தெளிப்பது உண்டு.  ராசாயன உரங்களுடன் உயிர் உரங்களை கலந்து எப்போதுமே பயன்படுத்தக் கூடாது. மழை காலங்களில் நீர் ஊற்றுவதை தவிர்க்க வேண்டும். வெயில் காலங்களில் இரண்டுமுறை தண்ணீர் தர வேண்டும். கோடைக்காலத்தில் ஏற்படும் செடிவாடலைத் தவிர்க்க குறைந்த செலவில் நிழல்வலைக்குடில் அமைக்க வேண்டும்.

செடிகள் அழுகினால் வேர்ப்பகுதியில் ஏதாவது அழுகல் நோய் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அதன்பின்னர் வேப்ப எண்ணெய் கரைசலை சிறிதளவு வேர்ப்பகுதியில் விட வேண்டும். மேலும் வீட்டில் சேரும் காய்கறிக் கழிவுகளை தொட்டியில் நேரடியாக உரமாகப் போடலாம். மாடித்தோட்ட தொட்டிகளைக் கீழே வெறும் தரையில் வைக்கக் கூடாது. பாலித்தீன் ஷீட்டுகளை விரித்து அதன்மேல் வைக்கலாம். இதனால் மாடியில் தண்ணீர் கசிவு ஏற்படும் பயம் இருக்காது. மாடித்தோட்டம் அமைக்க உங்கள் வீட்டு மொட்டை மாடி இடமே போதும். மாடித்தோட்டம் என்பது இயற்கைமுறை காய்கறிகளை மட்டும் நமக்குத் தருவதில்லை. நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவும். இதற்கு என்று தனியாக அதிகமாகச் செலவு செய்யத் தேவையில்ல. ஆர்வம் மட்டும் இருந்தால் போதும். விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள் அதிகமாக நடக்கும் இடங்களிலும், விதை திருவிழாக்களிலும் விதை வாங்கிக் கொள்ளலாம்.
முன்னர் தமிழ்நாடு அரசே மானிய விலையில் பொருட்களை கொடுத்து வந்தது. இத்திட்டம் இப்போதைக்குச் சென்னை, கோயம்புத்தூர் ஆகிய ஒருசில இடங்களில் மட்டும் செயல்பட்டு வருகிறது. 1000 ரூபாய்க்கு 685 ரூபாய் மானியம் தரப்படுகிறது. தேவையான அனைத்தையும் மாவட்ட தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். 
மாடித்தோட்டம் அமைக்க ஆடி மாதமே சரியானது. உங்களுடைய வீட்டுக்கு நீங்களே மாடித்தோட்டம் அமைத்தால், நீங்களும் ஒரு 'மினி' விவசாயி.


Friday, December 14, 2018

சிகா கல்வியியல் கல்லூரி - எட்டாவது பட்டமளிப்பு விழா அழைப்பிதழ்- (2015-17 ஆண்டு)மாணவர்கள்

 சிகா கல்வியியல் கல்லூரி - எட்டாவது பட்டமளிப்பு விழா அழைப்பிதழ்- (2015-17) மாணவர்கள் அனைவரையும்  வருக வருக என வரவேற்கிறோம்..

Friday, December 07, 2018

கரைசேரா கணினி கனவுகள் - கண்ணீர் விடும் கணினி ஆசிரியர்கள்

கரைசேரா கணினி கனவுகள் - கண்ணீர் விடும் கணினி ஆசிரியர்கள். 


நன்றி: புதிய தலைமுறை கல்வி மற்றும் திரு .வேலு

தற்காலிக கணினிஆசிரியர்கள் நியமனம் செய்ய அரசாணை வெளியிடு..

G.O Ms 770 - தற்காலிக கணினிஆசிரியர்கள் நியமனம் செய்ய அரசாணை வெளியிடு..





Tuesday, December 04, 2018

"நான்தான் உனக்குப் புள்ள...மாசம் ரூ.2,500 அனுப்புறேன்!"- தவித்த மூதாட்டியைத் தத்தெடுத்து, நெகிழ வைத்த அரசுப் பள்ளி ஆசிரியர்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட,  ஐந்து  பிள்ளைகளால் கைவிடப்பட்டு தனித்து வாழ்ந்த மூதாட்டியைத் தனது தாயாகத் தத்தெடுத்து, நெகிழ வைத்திருக்கிறார் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர்.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகில் உள்ள பொய்யாமணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வருபவர், பூபதி. 13 லட்சம் வரை ஸ்பான்ஸர் பிடித்து, தான் பணிபுரியும் அரசுப் பள்ளியைத் தனியார் பள்ளிகளைவிட அதிக வசதிகளைக் கொண்ட பள்ளியாக மாற்றியிருக்கிறார். 

இவரது செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, இவரின் நண்பரானவர் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை அடுத்துள்ள மருதவனம் கிராமத்தில் ஆசிரியையாகப் பணிபுரியும் அமுதா. சமீபத்தில் இந்தப் பகுதியை கஜா புயல் சிதைத்துப்போட, புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நினைத்திருக்கிறார் பூபதி.

அமுதாவிடம் பேசி, 'புயலால் பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் என்னால் உதவ முடியாது. யாராவது முதியவர் பாதிக்கப்பட்டிருந்தால் சொல்லுங்கள், அவருக்கு நிரந்தரமாக உதவுவோம்' என்று சொல்லியிருக்கிறார். அதன்படி, ஆசிரியை அமுதா மருதவனத்தில் தான் பெற்ற ஐந்து பிள்ளைகளால் கைவிடப்பட்டுத் தனித்து வாழ்ந்த பாக்கியம் பாட்டியைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். 


அவர் வசித்துவந்த ஒட்டுக் குடிசையையும் பழைய பாத்திரங்களையும், பழைய நைய்ந்த சேலைகளையும் கஜா புயல் சிதைத்துப் போட, பக்கத்து வீட்டில் தற்காலிகமாக வசித்துவந்திருக்கிறார். அவரது கதையைக் கேட்டு இதயம் கசிந்த பூபதியும், அவரது ஆசிரியை மனைவியான பிருந்தாவும், மளிகை சாமான்கள், 50 புடவைகள், சமையல் செய்யப் பயன்படுத்தும் சாமான்கள் சகிதமாகப் போய் இறங்கி இருக்கிறார். பாக்கியம் பாட்டி கையைப் பிடித்து,'என்னை மகனா நினைத்துக்கொண்டு இத வச்சிக்க.' என்று சொல்ல, கரகரவென கண்ணீர் சிந்தியிருக்கிறார்.
'கொள்ளு விரையாட்டம் அஞ்சு பிள்ளைகளைப் பெத்தேன். ஆனா, ஆளானதும் என்னை அம்போன்னு தவிக்கவிட்டுட்டு, தனியா போய்ட்டாங்க. என்னை சீந்தக்கூட நாதியில்லை. மாட்டுக்கொட்டகையைவிட கேவலமான குடிசையில் உசுரக் கையில புடிச்சுக்கிட்டு வாழ்ந்துகிட்டிருக்கேன். 75 வயசாயிட்டு. 

முன்னமாதிரி பொழப்புதழப்புக்கும் போக முடியலை. அரசாங்கம் தர்ற 1000 ரூபா முதியோர் உதவித்தொகையில சீவனம் நடந்துச்சு. இலவச ரேஷன் அரிசி வாங்கி திங்கக்கூட வழியில்லாம ரேஷன் கார்டைகூட பாவி புள்ளைங்க தூக்கிட்டுப் போயிட்டுங்க. இந்த நிலையில புயல் வந்து, என்னோட வீட்டையும், சாமான்களையும் சேதம் பண்ணிட்டு. வாழ்க்கையே இருண்டுகிடக்கு தம்பி' என்று நெக்குருகிச் சொல்லியிருக்கிறார்.
அதைக் கேட்டு கண் கலங்கிய பூபதி, "உன்னை என் தாயா தத்தெடுத்துட்டேன். உன் கடைசி காலம் வரைக்கும் நான்தான் உனக்குப் புள்ள. குடிசைபோட எவ்வளவு செலவாகும்' என்று கேட்டிருக்கிறார். 'ஐயாயிரம் வரை செலவாகும்' என்று சொல்லியிருக்கிறார். 'அதை அமைச்சுத் தர்றேன்' என்றதோடு, கையில் இரண்டாயிரம் பணத்தைக் கொடுத்துவிட்டு, "உன் கடைசி காலம் வரை உனக்கு மாசாமாசம் 2,500 ரூபாய் அனுப்புகிறேன்" என்று சொல்ல, உணர்ச்சிப் பெருக்கில் வார்த்தைகள் வராமல் பாக்கியம் பாட்டி நா தழுதழுத்திருக்கிறார்.

பூபதியிடமே பேசினோம். "அந்த அம்மாவின் கதையைக் கேட்டதும் மனசு நொறுங்கிப் போயிடுச்சு. கஜா புயலில் மருதவனம் கடுமையா பாதிக்கப்பட்டிருக்கு. ஆனா, தனது அம்மா கதி என்னன்னு ஒரு பிள்ளையும் வந்து அவரை பார்க்கலை. அது புயல் செய்த கொடுமையைவிட அவலம். அதனால், நானும் என் மனைவியும் அந்த மூதாட்டியைத் தாயாகத் தத்தெடுப்பதுனு முடிவுபண்ணி மாசாமாசம் 2,500 ரூபாய் அனுப்புறதா சொல்லியிருக்கிறோம். 
அதோட, மாசம் ஒரு தடவை போய் அவரைப் பார்த்து, அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்றதா இருக்கோம்.  அவருக்குப் புயல் பாதித்த அல்லலைவிட, தன் பிள்ளைகள் தன்னை வந்து பார்க்கலையேங்கிற மனக்குமுறல்தான் அதிகம். அந்தக் குறையை நானும் என் மனைவியும் ஆசிரியை அமுதா உதவியோடு போக்கியிருக்கிறோம்" என்றார் அழுத்தமாக.

 நன்றி

திறந்தநிலை பல்கலை.யில் பிஎச்.டி.: விண்ணப்பிக்க டிச. 29 கடைசி

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளின் கீழ் பிஎச்.டி. படிப்பை மேற்கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 29 கடைசி நாளாகும்.

இதுதொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு:

பல்கலைக்கழகத்தில் யுஜிசி அனுமதியுடன் தமிழ், ஆங்கிலம், மேலாண்மையியல், கல்வியியல், இயற்பியல், வேதியியல், விலங்கியல், குற்றவியல், மின்னணு ஊடகவியல், புவியியல், கணினி அறிவியல், பண்டைய வரலாறு மற்றும் தொல்பொருளியல் ஆகிய துறைகளின் கீழ் பிஎச்.டி. படிப்புகள் வழங்கப்படுகின்றன.

யுஜிசி-யின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகையைப் பெற தகுதியுடைய மாணவர்கள், உதவித் தொகையுடன் இந்த ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்ள முடியும். 

இதற்கான விண்ணப்பத்தை பல்கலைக்கழகத்தின் www.tnou.ac.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 29 கடைசி நாளாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.