#

#

#

#

#

#

#

#

#

#

Sunday, November 27, 2016

வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி...5 நாட்கள் சிறப்பு முகாம்



ஜன்தன் வங்கிக் கணக்குகளுக்கான ரூபே கார்‌டுகளை விநியோகிக்க சென்னையில் அனைத்து வங்கிக் கிளைகளிலும் நாளை முதல் 5 நாட்களுக்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
கடந்த, 2014 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பிரதமரின், ‘ஜன் தன் யோஜனா’ என்னும், ‘வீட்டுக்கு ஒரு வங்கி கணக்கு’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்பட்டு வருகிறது. ஜன்தன் வங்கிக் கணக்குகளுக்கான ரூபே கார்‌டுகளை விநியோகிக்க சென்னையில் அனைத்து வங்கிக் கிளைகளிலும் நாளை முதல் 5 நாட்களுக்கு அதாவது டிசம்பர் 2-ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதில், வாடிக்கையாள‌ர்கள் ஆதார் அட்டை எண் மற்றும் கைபேசி எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்துக்கொள்ளவும் விண்ணப்பம் அளிக்கலாம். மேலும், தொழிலாளர்கள் புதிய ஜ‌ன்தன் சேமிப்பு கணக்குகளை தொடங்குவதற்கான விண்ணப்பங்களை வழங்கவும் சிறப்பு முகாமில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ‌

Courtesy: http://tv.puthiyathalaimurai.com/detailpage/news/tamilnadu/112/68471/aadhar-card-connect-with-bank-accounts-five-days-special-camp

மின்னணு பணப் பரிவர்த்தனைக்கு மாற பிரதமர் மோடி வேண்டுகோள்

மின்னணு பணப்பரிமாற்ற வசதியை பயன்படுத்த ஒவ்வொரு இந்தியரும் உறுதி எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுகிழமையன்று மன் கி பாத் என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ரேடியோ மூலமாக நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று நடைபெற்ற மன் கீ பாத் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர், மின்னணு பணப்பரிமாற்ற வசதியை பயன்படுத்த ஒவ்வொரு இந்தியரும் உறுதி எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற சிலர் ஏழைகளைப் பயன்படுத்துவதாக கூறியுள்ள மோடி அவர்கள் வாழ்க்கையில் விளையாட வேண்டாம் என்றும் கே‌ட்டுக்கொண்டார். ஏழை மக்களும் தற்போது ரூபே ஏடிஎம் அட்டைகளை பயன்படுத்தத் தொடங்கியிருப்பதாகவும் அதன் பயன்பாடு‌ 3 மடங்கு அதிகரித்திருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
ஏழைகள், விவசாயிகள், நலிவடைந்தவர்கள் நலன் கருதியே 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாததாக்கும் முடிவை எடுத்ததாகவும் பிரதமர் தெரிவித்தார். இவ்விவகாரத்தில் மக்களின் சிரமங்களை ‌உணர்ந்திருப்பதாகவும் ஆனால் கறுப்புப் பணம் என்ற வியாதி கடந்த 70 ஆண்டுகளாக நாட்டை பீடித்‌திருப்பதாகவும் அதை குணப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல என்றும் பிரதமர் குறிப்பிட்டார். ரூபாய் பிரச்னைகள் சரியாக 50 நாட்களாகும் என தான் ஏற்கனவே கூறியிருந்ததாகவும் பிரதமர் தெளிவுபடுத்தினார்.
சிறு வியாபாரிகள் மின்னணு முறை பணப் பரிமாற்றத்துக்கு மாற இதுவே சரியான நேரம் என்றும் இது நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் பிரதமர் பேசினார். தொழிலாளர்கள் அனைவரும் வங்கிக் கணக்கைத் தொடங்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், இதன் மூலம் தொழிலாளர்கள் அவர்களுக்குரிய ஊதியத்தை பெற முடியும் என்றும் தெரிவித்தார்.
Courtesy: 

Tuesday, November 22, 2016

அருங்காட்சியகங்கள் துறை வெளியிடும் புத்தகங்கள் இணையதளத்தில் படிக்க வசதியாக இ-புக்ஸாக மாற்றம் இலவசமாக பதிவிறக்கம் செய்ய...

இந்தியாவின் இரண்டாவது பழமையான அருங்காட்சியகமான சென்னை அரசு அருங்காட்சியகம், கி.பி. 1851 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. கி.பி.1882 முதல், தொல்லியல், மானிடவியல், ஓவியம் மற்றும் சிற்பக்கலை, தாவரவியல், புவியியல், அருங்காட்சியகவியல், நாணயவியல், விலங்கியல், தொல்பொருட்கள் பாதுகாப்பு முதலிய துறைகளில் பல்வேறு புத்தகங்களையும் இதர பிரசுரங்களையும், அருங்காட்சியகங்கள் துறை வெளியிட்டுவருகிறது. அருங்காட்சியகங்கள் துறையின் வெளியீடுகள் உலகப்புகழ் பெற்றவையாகும். அருங்காட்சியக சேகரிப்புகளின் சுட்டுப்பொருட்கள் பற்றிய குறிப்பிடத்தக்க ஆராய்ச்சிகளின் விளைவாக அப்பதிப்புகள் இருப்பதால், அவை இவ்வுலகிற்கே சான்றாதார நூல்களாக உள்ளன.
இதுவரை, 183 புத்தகங்கள் (24000 பக்கங்கள்) இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும் பல புத்தகங்களை பதிவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அப்புத்தகங்களை, தேடக்கூடிய பி.டி.எஃப் வடிவில், வாசகர்கள் எளிதாக அணுகி, படித்திட, இந்த வலைதளம் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
வலைதள முகவரி: 

செல்லாத நோட்டு அறிவிப்பு... குவியும் பான் கார்டு விண்ணப்பங்கள்

மத்திய அரசின் அடுத்தடுத்த அதிரடிகளால் பான் கார்டு எனப்படும் நிரந்தர கணக்கு எண்ணுக்கு விண்ணப்பம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
வங்கிகளில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பண பரிவர்த்தனை செய்பவர்கள் மற்றும் தங்க நகை வாங்குவோர் கட்டாயம் பான் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவையடுத்து பான் கார்டு பெற மனு செய்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். மத்திய அரசின் நிறுவனங்களான யுடிஐ (UTI), என்எஸ்டிஎல் (NSDL) ஆகிய நிறுவனங்களில் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான மனுக்கள் குவிந்து வருவதாக சென்னையில் உள்ள யுடிஐயின் தென் மண்டல அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.Pan card
பான் கர்டு பெற என்ன தகுதி வேண்டும்?:
பான் கார்டு பெற எந்த கல்வித் தகுதியும் தேவையில்லை அதே போல் பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை எடுக்கலாம் எனவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். அதே போல் தற்போது வரை நாட்டில் 25 கோடி பேரிடம் பான் கார்டு இருப்பதாகவும், அடுத்தாண்டுக்குள் இந்த எண்ணிக்கை மேலும் உயரும் எனவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
பான் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?:
பான் கார்டை, வருமான வரித்துறையின் இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் மூலம் மற்றும் மத்திய அரசு நிறுவனங்கள் மூலம் இருப்பிட மற்றும் புகைப்பட ஆவணங்களை கொடுத்து எளிதில் பெற்றுக்கொள்ளலாம். அதே போல் தனி நபருக்கு புதிய கார்டு பெற ரூ.107 மட்டுமே கட்டணம் என்றும், அதிக கட்டணத்தை முகவர்களிடம் கொடுத்து ஏமாற வேண்டாம் எனவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
பான்கார்டு வாங்கினாலே வருமானவரி கட்டவேண்டும் என்ற தவறான புரிதல் மக்களிடம் இருப்பதாகவும், இதற்கு அவசியமில்லை என்றும் வருமானவரித்துறை விளக்கமளித்துள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க, நீக்க மற்றும் திருத்தங்கள் செய்ய நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
Election-commission-28116 fb
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெயர்களை சேர்க்க, நீக்கம் மற்றும் திருத்தங்கள் செய்ய வரும் 30ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 11 மற்றும் 25 ஆகிய தேதிகளில் விண்ணப்பங்களை பெறுவதற்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வைத்திருப்பதால் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க இயலாது என்றும் , குடியிருக்கும் பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Link:

Friday, November 18, 2016

மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்- நூல்கள் பார்வையிட, பதிவிறக்க...

மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்


இது ஒரு உலகளாவிய தமிழர்கள் இணையம்வழி ஒன்றுகூடி தமிழ் இலக்கியங்களின் மின்பதிப்புக்களை உருவாக்கி அவற்றை இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களும் தமிழார்வலர்களும் இலவசமாக பெற வசதிசெய்யும் திட்டம்.
எந்த ஒரு சமூகத்திற்கும் இலக்கியங்கள்தான் அக்கலாசாரத்திற்கான ஒரு முக்கிய எடுத்துக்காட்டு. அதை செவ்வனே காத்து உலகளாவிய தமிழர்களுக்கும் ஏனையோருக்கும் பகிர்ந்துகொள்வதும் வரும் சந்ததியினருக்கு கொண்டு செல்வதும் ஒவ்வொரு தமிழரின் கடமை. மதுரைத் திட்டம் இதற்கான ஒரு கூட்டு முயற்சி.
மதுரைத் திட்டம் எந்தவித அரசாங்க (அ) தனியார் நிறுவன உதவியின்றி, எந்தவித வியாபார நோக்கமுமின்றி நடைபெறுகின்ற ஒரு தன்னார்வ (voluntary) முயற்சி. 1998-ம் ஆண்டு தமிழர் திருநாள் (பொங்கல்) அன்று ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் இன்றும் தொடர்ந்து இயன்று வருகின்றது. உலகில் வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் முன்னூற்றுக்கு மேற்பட்ட தமிழர்களும் தமிழார்வலர்களும் ஒன்றுகூடி இத்திட்டத்தை நடத்தி வருகின்றனர்.
மதுரைத் திட்டம் உலகில் பல நாடுகளில் வசித்து வரும் தமிழர்கள் அவரவர் தங்களது வீடுகளில் தனியார் கணினி கொண்டு கிடைக்கும் நேரங்களில் தமிழ் இலக்கியங்களை கணினியில் உள்ளிட்டு (அ) பிழை திருத்தி மின்பதிப்புகளாக தயாரிக்கும் ஒரு கூட்டு முயற்சி. தமிழ் இலக்கியங்களை மின்வழி பாதுகாத்து மற்றவர்களுடன் இலவசமாக பகிழ்ந்து கொள்வதில் விருப்புள்ள அனைவரும் இத்திட்டதில் பங்கு பெறலாம்.
மதுரைத் திட்டத்தின் மின்பதிப்புகள் ஆரம்ப காலத்தில் இணைமதி, மயிலை தமிழ் எழுத்திருக்கள் (fonts) கொண்டு தயாரிக்கப்பட்டது. ஆனால் 1999-ம் ஆண்டிலிருந்து இணையம் வழி தமிழ் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான என இணையம்வழி நிர்மானிக்கப்பட்ட தமிழ் தகுதர (TSCII - Tamil Script Code for Information Interchange) வடிவம் கொண்டு தயாரித்து மின்பதிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றது. மின்பதிப்புகள் இணையத்தில் இணைய பக்கங்களாகவும் (webpages in html format), PDF வடிவத்திலும் வினியோகிக்கப்பட்டு வருகிறது. 2003-ம் ஆண்டிலிருந்து பல்மொழி ஒருங்குக் குறியீடு (Unicode) முறை தயாரிக்கப்பட்ட மின்பதிப்புகளையும் வெளியிட்டு வருகிறோம்.
தமிழ் இலக்கியக்களின் சரித்திம் மிக பழமையானது. முதற் சங்க கால நூல்கள்இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இயற்றப்பட்டது என்பது வல்லுனர்கள் கருத்து. மதுரைத் திட்டம் காலம், சமயம், தேசப்பிரிவு, இலக்கியப்பிரிவு போன்ற எவ்வித பாகுபாடுமின்றி எல்லாவிதமான தமிழ் நூல்களின் மின்பதிப்புக்களை வெளியிட்டு வருகின்றது. தொன்றுதொட்ட சங்க கால நூல்கள்முதல் தற்கால தமிழ்நூல்கள் வரை அனைத்தும் வெளியிடப்படுகிறது. ஒரேஒரு கட்டுப்பாடு புத்தக வடிவில் வெளியான நூல்களுக்கான காப்புரிமைகளுக்கு மரியாதை கொடுத்து கண்ணியமாக நடப்பது. காப்புரிமை இல்லா எல்லா நூல்களையும் மின்பதிப்பில் வெளியிடலாம். காப்புரிமை உள்ள கடந்த நூற்றாண்டு, தற்கால நூல்களுக்கு காப்புரிமை கொண்டோரின் அனுமதி தேவை.
மதுரைத் திட்டத்தைப் பற்றி மற்ற விவரங்களையும் தமிழ் நூல்களின் மின்பதிப்புக்களையும் இந்த இணைய தளத்தின் பக்கங்கள் மூலமாக இலவசமாக பெறலாம். மதுரைத் திட்ட இணைய தளத்திற்கு வருகை தந்ததற்கு எங்களது மனமார்ந்த நன்றி. தங்களது வருகை தொடர்ந்து நீடிக்கும் என்று கருதுகிறோம். மதுரைத் திட்டத்தில் பங்கு கொள்ள விரும்புவோர் மின்னஞ்சல் மூலமாக மதுரைத் திட்ட தலைவருடன் kalyan AT geocities.com & kumar AT vt.edu தொடர்பு கொள்ளவும்.
வலைதள முகவரி:
 நன்றி: http://www.projectmadurai.org/index.utf8.html

Friday, November 04, 2016