#

#

#

#

#

#

#

#

#

#

Wednesday, February 16, 2022

ஓர் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்? - 10 அம்சங்களில் எதிர்பார்ப்புகளை அடுக்கும் லயோலா கல்லூரி மாணவர் குரல் !

 *ஓர் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்? - 10 அம்சங்களில் எதிர்பார்ப்புகளை அடுக்கும் லயோலா கல்லூரி மாணவர் குரல் -நன்றி : "இந்து" நாளிதழ் பதிப்பு!!*



*உலகில் இரண்டு புனிதமான இடங்கள் உள்ளன. ஒன்று தாயின் கருவறை.*

 இன்னொன்று ஆசிரியரின் வகுப்பறை. தாயின் கருவறையில் ஒருவன் உயிரைப்பெறுகிறான். ஆசிரியரின் வகுப்பறையில் அவன் அறிவினைப் பெறுகிறான்.


*1. கதிரவனைப் போல்...*


காலைக் கதிரவனைப் போல் காலம் தவறாமல் பள்ளிக்குச் செல்லுங்கள். காலைப் பனித்துளியைப் போல் புத்துணர்வுடன் செல்லுங்கள். மழையைச் சுமந்து வரும் மேகத்தைப் போல் பாடத்தை நன்கு தயார் செய்துகொண்டு வகுப்புக்குள் நுழையுங்கள். அழகிய சோலையில் நுழைவது போல் வகுப்பினுள் நுழையும்போது மகிழ்ச்சியுடன் நுழையுங்கள்.


*2. புன்னகை அவசியம், முகத்தைக் கடுகடுப்பாக வைத்துக்கொள்ள வேண்டாம்...!*


உங்கள் கோபத்தினால் அழகிய மலர் வாடிவிடுவது போன்று மாணவர்களின் முகமும் வாடிவிடும். வகுப்பில் பாடத்தைத் தொடங்கும் முன் மாணவர்களைப் பார்த்து சிறு புன்னகை செய்யுங்கள். உங்கள் முகத்தில் தவழும் புன்னகையால், மாணவர்களிடம் புன்முறுவல் பூக்கச் செய்யுங்கள்.


*3. நடிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்...*


பாடத்தில் உள்ள கவிதையை கவிஞனைப் போல் வாசியுங்கள். கட்டபொம்மனைப் பற்றிப் பாடம் நடத்தப் போகின்றீர்கள் என்றால் கட்டபொம்மனைப் போல் மாணவர்களிடத்தில் பேசிக் காட்டுங்கள். நாடக வடிவில் உள்ள பாடங்களை நடத்தினால் நாடகக் கலைஞனாகி விடுங்கள். இதுபோன்ற செயல்கள், மாணவர்கள் பாடத்தை எளிதாகப் புரிந்துகொள்வதற்கு உதவும்.


*4. பாடம் வேண்டாம்...*


 ஆசிரியர் என்பவர் வெறும் பாடத்தை மட்டும் நடத்திக்கொண்டே இருந்தால் போதாது. ஆகவே வாரத்தில் ஒரு பாடவேளையில் பாடத்தை நடத்தாமல் மாணவர்களிடத்தில் உள்ள தனித்திறமைகளை வெளிக்கொண்டு வர முயலலாம். உதாரணத்துக்குப் படம் வரைவது, கட்டுரை எழுதுவது, நாடகம் நடிப்பது, மேடைப் பேச்ச, விளையாடுதல், நடனம் ஆடுவது, இசைக்கருவிகளை இசைப்பது, பாடுவது போன்றவை மூலம் பல திறமையான மாணவர்களை இந்த உலகிற்கு நீங்கள் வழங்கலாம்.


*5. கேள்வி கேளுங்கள்...!*


 பாடம் நடத்தும்போது மாணவர்களிடம் அதிகமாகக் கேள்வி கேளுங்கள். மாணவர்கள் கேள்வி கேட்கவும் வாய்ப்புத் தாருங்கள். மாணவர்களின் சிந்திக்கும் ஆற்றலை வளர்க்கும் நோக்கத்துடன் கேள்விகளைக் கேளுங்கள். வகுப்பில் கூட்டமாகச் சேர்ந்து ஒரே குரலில் பதில் சொல்லும் பழக்கத்தைத் தவிர்க்கப் பாருங்கள்.


*6 . கடைசி அய்ந்து நிமிடங்கள்...!* 


புதிதாக நடத்தும் பாடத்துக்கும் மற்றும் முந்தைய பாடத்துக்கும் உள்ள தொடர்பை விளக்கிக் கூற, பாடவேளையின் கடைசி அய்ந்து நிமிடங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் பாடம் நடத்தினால், அன்று வகுப்புக்கு வந்த மாணவர்கள் உங்கள் பாடத்தைக் கேட்டு இன்புற வேண்டும். அன்று வகுப்புக்கு வருகை தராத மாணவர்கள் அடுத்த நாள் உங்கள் பேச்சைக் கேட்க ஓடி வர வேண்டும் என்பதை நிலைநாட்டுங்கள்.


*7. நூலகத்தைப் பயன்படுத்துங்கள்...*


 மாணவர்கள் நூலகத்திலிருந்து சில நூல்களை எடுத்துப் படித்து, பயன்பெறக் கூடிய வகையில் நல்ல நூல்களின் பெயர்கள், நூலாசிரியர்களின் பெயர்கள், நூல்களின் சிறப்பு ஆகியன பற்றிச் சொல்லுங்கள். உண்ணுதல், உறங்குதல் போலவே நல்ல நூல்களை வாசிப்பதும் ஒருவரின் எதிர்கால வாழ்வை மகிழ்ச்சியாகக் கழிக்க அவசியம் என்பதை மாணவர்களுக்குக் கற்பியுங்கள்.


*8. பாடப்புத்தகத்தை தாண்டி...!*


வாழ்க்கை மிகப் பெரியது. இந்தப் பெரிய உலகத்தை சிறிய புத்தகங்களுக்குள் அடக்கிவிடாமல் மாணவர்களுக்கு விசாலமான பார்வையைப் பார்க்கக் கற்றுக் கொடுங்கள். பாடநூல்கள் தகவல்களைக் கற்க உதவுகின்றன. இவை ஞானத்தை வளர்த்திட உதவுவதில்லை. எனவே பாடநூலுக்குள் மட்டும் மாணவர்களை கட்டிப் போட்டுவிடாதீர்கள். பாடநூலுக்கும் அப்பாலும் கடல் போல் அறிவு விரிந்து பரந்து கிடக்கிறது என்ற உண்மையை மாணவர்களுக்கு உணர்த்திடுங்கள்.


*9. உங்கள் பிள்ளை அவர்கள்...!*


 மாணவர்களிடம் ஒரு தாயைப் போல, ஒரு தந்தையைப் போல் நடந்துகொள்ளுங்கள். மாணவர்களின் நலனில் அக்கறை காட்டுங்கள். மாணவர்களிடம் அன்னையின் அன்பையும், தந்தையின் கண்டிப்பையும், நண்பனின் நட்பையும் கொடுங்கள். மாணவர்களின் முழுப் பெயரைச் சொல்லி அழையுங்கள். உங்கள் வகுப்பில் பயிலும் ஒவ்வொரு மாணவரின் முகத்தையும் பெயரையும் நன்றாக நினைவில் வைத்திருங்கள்.


*10. நம்பிக்கையைக் கொடுங்கள்...!*


 உன்னால் முடியும், நிச்சயம் வெற்றி பெறுவாய், நம்பிக்கையுடன் இரு, வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனையாளராக வருவாய், நல்ல நிலையை அடைவாய் போன்ற நேர்மறையான வார்த்தைகளுக்கு மாணவர் மத்தியில் மிகப்பெரிய சக்தி உண்டு. இந்த வார்த்தைகளை அடிக்கடி மாணவர்களிடத்தில் கூறிக்கொண்டே இருங்கள். மறந்து போய்க்கூட முடியாது, நடக்காது போன்ற எதிர்மறையான சொற்களை மாணவர்களிடத்தில் பயன்படுத்தாதீர்கள். இந்த வார்த்தைகள் மாணவர்களின் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தும்.


 **நல்லாசிரியராய்.. அன்பாசிரியராய்த் திகழுங்கள். 


நன்றி : "இந்து" நாளிதழ் பதிப்பு!!*

Sunday, July 11, 2021

TNTEU Online Practical Exam - Student's Guidelines

Courtesy: Dr.Jayanthi, Assistant Professor, TNTEU, Chennai.

Thursday, April 23, 2020

தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்கள்- வ்ங்கிக்கணக்கு விவரங்கள் அளித்து கொரோனா நிவாரண நிதி பெற படிவம்.

தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்கள்- வ்ங்கிக்கணக்கு விவரங்கள் அளித்து கொரோனா நிவாரண நிதி பெற படிவம்.கீழே உள்ள இணைப்பு மூலம் படிவம் பூர்த்தி செய்து பயன் பெறலாம்.

BANK ACCOUNT DETAILS (SOCIAL SECURITY SCHEME)




அன்பும் அறிவும்| Arivum Anbum Official Video Dr Kamal Haasan Ghib...



கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதால் ஊரடங்கு உத்தரவை மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வீட்டிலேயே அடங்கிக்கிடக்கும் மக்களுக்கு இது ஒரு பெரும் பாதிப்பாகவும், அச்சமாகவும், சவாலாகவும் உள்ளது. இதனால் வீட்டில் அடங்கியிருக்கும் மக்களின் தன்னம்பிக்கையை உயர்த்தவும், பாஸிட்டிவிட்டியை கூட்டவும் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பாடல் ஒன்றை எழுதியுள்ளார்.

இந்த பாடலை ஜிப்ரான் இசையமைக்க கமலுடன் இணைந்து அனிருத், யுவன் ஷங்கர்ராஜா, தேவிஸ்ரீ பிரசாத், ஷங்கர் மகாதேவன், ஸ்ருதி ஹாசன், பாம்பே ஜெயஸ்ரீ, சித்தார்த், லிடியன், ஆண்ட்ரியா, சித் ஸ்ரீராம், முகென் ஆகியோர் பாடியுள்ளனர். இந்தப் பாடலை திங்க் மியூசிக் நிறுவனம் தனது யூட்யூப் சேனலில் இன்று வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே, தன்னை தானே தனிமை படுத்தி கொண்டும்... கொரோனா எதிர்ப்பு பணிகள் பற்றிய தன்னுடைய கருத்துகளையும் சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வரும் இவரின் புது முயற்சியாக ' அறிவும் அன்பும்' என்கிற பாடல் உருவாகியுள்ளது.

தற்போது நிலவி வரும் சூழ்நிலையை எடுத்து கூறும் வகையில் இந்த பாடலை, பாடியும் இயக்கியும், உள்ளார் கமல்ஹாசன். இப்பாடலை மேலும் சிறப்பாகும் விதமாக, திரையுலகை சேர்ந்த  பல கலைஞர்கள்  இந்த பாடலை கமலுடன் சேர்ந்து பாடியுள்ளனர்.
அந்த வகையில், இந்த பாடலை... அனிருத், யுவன் ஷங்கர் ராஜா, தேவி ஸ்ரீ பிரசாத், ஷங்கர் மஹாதேவன், ஸ்ருதி ஹாசன், பாம்பே ஜெயஸ்ரீ , சித்தார்த், லிடியன், ஆண்ட்ரியா, சித் ஸ்ரீராம், மற்றும் பிக்பாஸ் முகேன் ஆகியோர் ஒன்று செய்து இந்த பாடலை கமலுடன் பாடியுள்ளனர்.

இந்த பாடலுக்கு இசையமைப்பாளர் ஜிப்ரன் இசையமைத்துள்ளார். மகேஷ் நாராயணன் படத்தொகுப்பு செய்துள்ளார்.  பிரமாண்டமாக உருவாகி உள்ள இந்த பாடல் இன்று (ஏப்ரல் 23 ஆம் தேதி), காலை 11 மணிக்கு வெளியாக உள்ளது. இந்த அறிவிப்பை நடிகர் கமலஹாசன் தரப்பில் இருந்து போஸ்டர் வெளியிட்டு தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த பாடல் வெளியாகி உள்ளது.

கமலின் அறிவும் அன்பும் பாடல் உருவானது எப்படி?: இசையமைப்பாளர் ஜிப்ரான் பேட்டி
கரோனா விழிப்புணர்வுக்காக கமல் எழுதிய பாடல் குறித்து இசையமைப்பாளர் ஜிப்ரான் பேட்டியளித்துள்ளார்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 1 லட்சத்து 77 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 19,900 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா விழிப்புணர்வு தொடர்பாக குறும்படம், பாடல்கள் என பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் திரையுலகப் பிரபலங்கள். இந்நிலையில் கரோனா விழிப்புணர்வுக்காக கமல் ஹாசன் பாடல் ஒன்றை எழுதி இயக்கியுள்ளார்.

பொருளாதாரம், நவீன வாழ்க்கையைத் தாண்டி அழியாத உண்மையாக அறிவும் அன்பும் மட்டுமே உள்ளது. இதன்மூலம் இன்னல்களைக் கடக்க முடியும் என்கிற நம்பிக்கையை விதைக்கும் வகையில் அறிவும் அன்பும் பாடலை எழுதியுள்ளேன் என்று கமல் கூறியுள்ளார்.

திங்க் மியூசிக் சார்பில் உருவாகியுள்ள அறிவும் அன்பும் என்கிற இப்பாடலுக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஷங்கர் மகாதேவன், ஷ்ருதி ஹாசன், மாஸ்டர் லிடியன், பாம்பே ஜெயஸ்ரீ, ஆண்ட்ரியா, தேவி ஸ்ரீ பிரசாத், யுவன் சங்கர் ராஜா, அனிருத், சித்தார்த், முகென், சித் ஸ்ரீராம் போன்றோர் இணைந்து கமல் எழுதிய பாடலைப் பாடியுள்ளார்கள். ஜூம் செயலி மூலம் கமலும் ஜிப்ரானும் இணைந்து இப்பாடலை இன்று காலை 11 மணிக்கு வெளியிட்டார்கள். மற்ற பாடகர்கள் தங்கள் வீட்டில் இருந்தே இப்பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார்கள்.

இப்பாடல் குறித்து இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசியதாவது:

ஊரடங்கு காலம் குறித்து பாடல் ஒன்றை உருவாக்கலாம் என ஓர் உரையாடலில் கமல் சார் என்னிடம் சொன்னார். முதலில் அவர் பாடலை எழுதினார். அதற்கு நான் ட்யூனை அமைக்க ஆரம்பித்தேன். ஆனால் எவ்விதக் கட்டுப்பாடுகளும் எனக்கு இருக்கக்கூடாது என முதலில் ட்யூனை அமைக்கச் சொன்னார். ட்யூனைக் கேட்டு இரு நாள்கள் கேட்டார். ஆனால் மூன்றே மணி நேரத்தில் பாடல் வரிகளை எனக்கு அனுப்பினார். மூன்றாம் உலகப் போர் போன்ற சூழலில் உள்ளோம் என அனைவருக்கும் தெரியும். உலகம் இனி முன்பு போல இருக்காது. கரோனாவுக்கு முன்பு, பின்பு என உலகை மதிப்பிடுவோம். 

அன்பு தான் இந்தப் பாடலின் பிரதானம்.

இப்பாடலுக்காக 12 பாடகர்களைத் தாண்டி கோரஸ் பாடர்களையும் பயன்படுத்த நினைத்தோம். ஆனால் ஊரடங்குச் சமயத்தில் இதை எப்படி அணுகுவது எனத் தெரியவில்லை. வீட்டில் ரெக்கார்டிங் வசதிகள் கொண்டவர்கள் இதற்காக விண்ணப்பிக்க இணையம் வழியாக வேண்டுகோள் விடுத்தோம். நூற்றுக்கணக்கானவர்கள் அணுகினார்கள். அவர்களிலிருந்து 37 பேரைத் தேர்வு செய்தோம். அவர்களும் விடியோவில் இடம்பெற்றுள்ளார்கள் என்று கூறியுள்ளார்.

Monday, April 20, 2020

Sunday, April 19, 2020

பி.எட்- இரண்டாம் ஆண்டு- தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் நடத்திய வினாத்தாள் (2019 ஆம் ஆண்டு).


பி.எட் -மாணவர்களுக்கான தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் நடத்திய வினாத்தாள் (2019 ஆம் ஆண்டு)  

Click to Download B.Ed. II Year Major Question Papers 2019


கீழ்கானும் லிங்க் கிளிக் செய்தவுடன் உங்களுக்கு தேவையான தமிழ் மற்றும் ஆங்கிலம் வடிவில் உள்ள தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் பாட குறிப்புகளை ( Study Material) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNTEU - B.Ed., Study Material Click Here


உள்ளே போ புள்ளீங்கோ உள்ளே போ- Corona Awarness Song by Taj Noor | கொரோனா ...



உள்ளே போ புள்ளீங்கோ உள்ளே போ- Corona Awarness Song by Taj Noor | கொரோனா விழிப்புணர்வு பாடல்

PF- ல் முன்பணம் (COVID-19) எடுக்க புதிய வழிமுறை I New method | PF Advance Withdraw...


COVID-19 - PF- ல் முன்பணம் எடுக்க புதிய வழிமுறை 

Tuesday, April 14, 2020

Saturday, April 11, 2020

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை- வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்க வழிவகை!


தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை

https://e-learn.tnschools.gov.in/ என்ற இணைய தளத்தின் வழியே வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்க வழிவகை செய்துள்ளது. 


இந்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு பெற்றோரும் மாணாக்கர்களும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Thursday, April 09, 2020

மழைக்கால கவிதைகள்- அருமையான படைப்பு!!!

வானவில்
வானமங்கைக்கு
இயற்கை
அணிவிக்கும்
வண்ண அட்டிகை!


புயல்
சாது
மிரண்டால்
காடு கொள்ளாது!
தென்றல்
மிரண்டால்
நாடு தாங்காது!

இடிச் சத்தம்
முகில்கள்
நடத்தும்
மல்யுத்தம்!


கதிரவன்
இருளை
விரட்டுவான்
ஆனால்
இரவுக்கு அஞ்சுவான்!


வெயில்
குளிருக்கு
இயற்கை தந்த
கம்பளிப் போர்வை!

மழை
உலகிலேயே
மிக உயரத்தில்
இருந்து கொட்டும்
அருவி!

நட்சத்திரங்கள்
பகலிலே
அடங்கி இரவிலே
வெளிவரும்
விண்வெளி ஆந்தைகள்!

முழுநிலவு
யாராலும்
எட்டி உதைத்து
ஆடமுடியாத
கால்பந்து!

ஆகாயம்
இயற்கை
ஓவியம் தீட்டும்
சுவர்!

கடல்
ஆகாயம்
முகம் பார்க்கும்
கண்ணாடி
கவிதை தொகுப்பு
த.ஹேமாவதி
கோளூர்

Friday, January 03, 2020

தமிழ்நாடு காவல்துறை காவலன் - எஸ்ஓஎஸ் (Tamil Nadu Police - Kavalan SOS App)


தமிழக மாநில காவல்துறை மாஸ்டர் கண்ட்ரோல் ரூம் முன்முயற்சியின் ஒரு பகுதியாக, காவலன் எஸ்ஓஎஸ் ஆப், மாநில மக்களுக்கு கொண்டு வருவதில் பெருமிதம் கொள்கிறது, இது போன்ற அவசரகால சூழ்நிலைகளில் உடனடியாக போலிஸ் உதவியை நாட தமிழக மக்கள் பயன்படுத்தலாம் உடல் அவசரநிலைகள், ஈவ் கிண்டல், கடத்தல் அல்லது வெள்ளம், பூகம்பங்கள் போன்ற இயற்கை பேரழிவுகள்

காவலன் சோஸ் பயன்பாடு யாருக்கு?
தமிழ்நாட்டின் குடிமக்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள், அவர்கள் பாதிக்கப்படக்கூடிய அல்லது அச்சுறுத்தலாக உணரும்போதெல்லாம் காவலன் பயன்பாட்டைப் பயன்படுத்தலாம், இதனால் காவல்துறையினரின் உதவி அவர்கள் எங்கிருந்தாலும் விரைவாக அவர்களை அடைய முடியும். இயற்கை பேரழிவுகள் போன்ற அவசர காலங்களில் மக்கள் இந்த சேவையின் மூலம் உடனடியாக காவல்துறையினரை தொடர்பு கொள்ளலாம். பெயரில்லாத புகார்களை உடனடியாக சரிபார்க்க முடியும், விலையில் நேரத்தையும் வளத்தையும் மிச்சப்படுத்துகிறது

“காவலன் சோஸ்” பயன்பாடு எவ்வாறு செயல்படுகிறது?
தமிழ்நாடு காவல் துறையின் அதிகாரப்பூர்வ பயன்பாடு "காவலன் எஸ்ஓஎஸ்" ஆண்ட்ராய்டு மற்றும் iOS க்கு கிடைக்கிறது.

நிறுவிய பின், உங்கள் தனிப்பட்ட மொபைல் எண், வீட்டு முகவரி மற்றும் பதிவு செய்ய மாற்று மொபைல் எண்ணை வழங்கவும்.

பதிவுசெய்தல், உங்கள் மின்னஞ்சல் முகவரி, பிறந்த தேதி, பாலினம், முகவரி மற்றும் நகரம் போன்ற கட்டாய விவரங்களை வழங்கவும்.

எந்தவொரு இரு உறவினர்கள் அல்லது நெருங்கிய நண்பர்களின் தொடர்பு விவரங்களை அவசர தொடர்புகள் ஒரே நகரத்தில் வசிப்பதாக வழங்கவும். மொபைல் எண், பெயர் மற்றும் உறவு போன்ற விவரங்கள் கட்டாயமாகும். கூடுதலாக, நீங்கள் மூன்றாவது தொடர்பு நபரை அவசரகால தொடர்பாக சேர்க்கலாம்.

பதிவுசெய்தலை முடிக்க உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் செயல்படுத்தும் குறியீட்டைப் பெறுவீர்கள்.

உங்கள் செயல்படுத்தும் குறியீட்டை உள்ளிடவும், உங்கள் உள்நுழைவு செயல்முறை முடிந்தது. கவலான் முகப்புத் திரை இதை இடுகையிடும்.

அவசரகாலத்தின் போது, ​​முகப்பு பக்கத்தில் உள்ள SOS பொத்தானை அழுத்தினால் 5 வினாடி கவுண்டன் தொடங்குகிறது.

5 விநாடிகளுக்குப் பிறகு, உங்கள் தற்போதைய கேமராவிலிருந்து வீடியோவுடன் கவாலன் குழுவுக்கு உங்கள் தற்போதைய இருப்பிடத்தை பயன்பாடு தானாக வரைபடத்தில் அனுப்புகிறது. ஒரு நிமிடத்திற்குள், குழு உங்களைத் தொடர்பு கொள்ளும்.

அதேசமயம், உங்கள் இருப்பிடம் உங்கள் முன்பதிவு செய்யப்பட்ட “அவசர தொடர்புகளுக்கு” ​​ஒரு எஸ்எம்எஸ் எச்சரிக்கையாக அனுப்பப்படும்.

கூகுள் பிளே ஸ்டோர் லிங்க்:-


நன்றி:-
காவலன் - எஸ்ஓஎஸ் தொழில்நுட்ப சேவைகள், 
தமிழ்நாடு காவல்துறை, 
சென்னை -4 ஆல் இயக்கப்படுகிறது.