Thursday, April 09, 2020

மழைக்கால கவிதைகள்- அருமையான படைப்பு!!!

வானவில்
வானமங்கைக்கு
இயற்கை
அணிவிக்கும்
வண்ண அட்டிகை!


புயல்
சாது
மிரண்டால்
காடு கொள்ளாது!
தென்றல்
மிரண்டால்
நாடு தாங்காது!

இடிச் சத்தம்
முகில்கள்
நடத்தும்
மல்யுத்தம்!


கதிரவன்
இருளை
விரட்டுவான்
ஆனால்
இரவுக்கு அஞ்சுவான்!


வெயில்
குளிருக்கு
இயற்கை தந்த
கம்பளிப் போர்வை!

மழை
உலகிலேயே
மிக உயரத்தில்
இருந்து கொட்டும்
அருவி!

நட்சத்திரங்கள்
பகலிலே
அடங்கி இரவிலே
வெளிவரும்
விண்வெளி ஆந்தைகள்!

முழுநிலவு
யாராலும்
எட்டி உதைத்து
ஆடமுடியாத
கால்பந்து!

ஆகாயம்
இயற்கை
ஓவியம் தீட்டும்
சுவர்!

கடல்
ஆகாயம்
முகம் பார்க்கும்
கண்ணாடி
கவிதை தொகுப்பு
த.ஹேமாவதி
கோளூர்

0 comments:

Post a Comment